tamilnadu

img

அண்ணல் காந்தியின் 150வது பிறந்த நாளை முன்னிட்டு எல்ஐசி ஊழியர் சங்கங்கள் உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி

தீண்டாமை கொடுமைக்கு எதிரான தேசத்தின் ஆன்மாவை தட்டி எழுப்பிய அண்ணல் காந்தியின் 150வது பிறந்த நாளை முன்னிட்டு கும்பகோணம் எல்ஐசி ஊழியர் சங்கங்கள் சார்பில் உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி நடைபெற்றது. எல்ஐசி கிளை-2 தலைவர் சுரேஷ் தலைமை வகித்தார். கோட்ட இணைச் செயலாளர் சேகர், புருஷோத்தமன் உள்ளிட்ட எல்ஐசி ஊழியர்கள் கலந்து கொண்டனர். அதேபோல் கும்பகோணம் கிளை-1ல் கிளை தலைவர் பாலசுப்பிரமணியன் தலைமையில் கண்ணன் மற்றும் ஊழியர்கள் உறுதிமொழி ஏற்றுக் கொண்டனர்.