tamilnadu

img

மருத்துவக் காப்பீடு கோரி எல்ஐசி முகவர்கள் ஆர்ப்பாட்டம்

கும்பகோணம், செப்.24- பாலிசிதாரர்களிடமிருந்து எல்ஐசி பாலிசிக்கு மற்றும் தாமத கட்டணத் திற்கு வசூலிக்கப்படும் ஜிஎஸ்டியை நீக்க வேண்டும். குழு காப்பீடு செய்ப வர்களுக்கு வயது வரம்பை தளர்த்திட வேண்டும் காலாவதியாகி புதுப்பிக் கும் பாலிசிகளுக்கு காலத்தை 2 ஆண்டு களில் இருந்து 5 ஆண்டுகளாக உயர்த்த வேண்டும் அனைத்து முகவர்களுக் கும் மருத்துவக் காப்பீடு வழங்க வேண் டும் என்பன உள்ளிட்ட கோரிக்கை களை வலியுறுத்தி கும்பகோணம் எல்ஐசி அலுவலகம் முன்பு எல்ஐசி முக வர் சங்கம் சார்பில் தர்ணா போராட்டம் நடைபெற்றது சங்க பொறுப்பாளர் தமிழ்ச்செல் வன் தலைமையேற்றார். கோரிக்கை களை விளக்கி மாநிலக்குழு உறுப்பி னர் குழந்தைவேலு இன்சூரன்ஸ் ஊழி யர் சங்க கோட்ட துணை தலைவர் சுப்பி ரமணியன் கோட்ட இணைச் செயலா ளர் சேகர் வளர்ச்சி அதிகாரிகள் சங்க பொறுப்பாளர் நரேந்திரன் மற்றும் ஊழி யர் சங்க பொறுப்பாளர்கள் சுரேஷ் புருஷோத்தமன் ஆகியோர் கோரிக் கைகளை விளக்கி பேசினர். எல்ஐசி முக வர்கள் சங்க பொறுப்பாளர்கள் முரு கன் ஜெயக்குமார் சங்கர் செல்வமணி ஸ்டாலின் கலியபெருமாள், லட்சுமி, புனிதா, உள்ளிட்ட ஏராளமான எல்ஐசி ஊழியர்கள் மற்றும் முகவர்கள் கலந்து கொண்டு போராட்டம் செய்தனர்.