tamilnadu

img

இராயமுண்டான்பட்டியில் தோழர் என்.வெங்கடாலசம் நினைவிடத்தில் தலைவர்கள் செவ்வணக்கம்

தஞ்சாவூர்:
தஞ்சாவூர் மாவட்டம் பூதலூர் ஒன்றியம்,இராயமுண்டான்பட்டியில் உள்ள தியாகி என்.வி. நினைவிடத்தில் அஞ்சலி செலுத்தும்நிகழ்ச்சி திங்கள்கிழமை நடைபெற்றது. கிளைச் செயலாளர்கள் கே.ரமேஷ், ஆர்.கே.பெரியசாமி, ஆர்.தீபன், வி.சந்தோஷ் ஆகியோர் தலைமை வகித்தனர். என்.வி.நினைவிடத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாவட்டச் செயலாளர் கோ.நீலமேகம், அகிலஇந்திய விவசாயத் தொழிலாளர் சங்க மாநிலச்செயலாளர் எம்.சின்னத்துரை, பூதலூர் தெற்கு
ஒன்றியச் செயலாளர் சி.பாஸ்கர் ஆகியோர்மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர். தொடர்ந்து மாவட்டச் செயலாளர் கோ.நீலமேகம் கட்சிக் கொடியேற்றி வைத்தார். 

விதொச மாநிலப் பொருளாளர் எஸ்.சங்கர், திருச்சி ஆர்.நடராஜன், சிபிஎம் மாவட்டச் செயற்குழு உறுப்பினர்கள் ஆர்.மனோகரன், வெ.ஜீவகுமார், கே.பக்கிரிசாமி, சி.ஜெயபால், எம்.மாலதி, என்.வி.கண்ணன், மாவட்டக்குழு உறுப்பினர்கள் கே.அபிமன்னன், எம்.ராம், எம்.பழனி அய்யா,என்.சரவணன், ஆர்.கலைச்செல்வி, பி.எம்.இளங்கோவன், ஒன்றியச் செயலாளர்கள் பூதலூர் வடக்கு கே.காந்தி, திருவையாறு ஏ.ராஜாமற்றும் பல்வேறு ஒன்றியக்குழு, நகரக்குழு, கிளை நிர்வாகிகள், முன்னணி தோழர்கள் கலந்து கொண்டனர். நிறைவாக ஒன்றியக் குழு உறுப்பினர் வியாகுலதாஸ் நன்றி கூறினார்.

;