tamilnadu

img

கும்பகோணம் பள்ளி பொன் விழா

கும்பகோணம்: கும்பகோணம் அல்அமீன் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியின் 50ம் ஆண்டு பொன் விழா நடந்தது. தாளாளர் கமாலுதீன் தலைமை வகித்தார். தஞ்சை மாவட்ட முஸ்லிம் கல்வி சங்க தலைவர் முகமது இக்பால், கவுரவ தலைவர் ஜிர்ஜிஸ், துணைத் தலைவர் முகமது ஜியாவுதீன், ஹபீபுர் ரஹ்மான் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இன்ஜினீயர் முகமது ரபி வரவேற்றார். பொன் விழா நினைவு புதிய கட்டிடத்தை தொழிலதிபர்கள் அப்துல்பாரி, ஷாகுல்ஹமீது ஆகியோர் திறந்து வைத்தனர். ராமநாதபுரம், மயிலாடுதுறை எம்.பி.,க்கள் நவாஸ்கனி, ராமலிங்கம், எம்எல்ஏக்கள் அன்பழகன், செழியன், அதிமுக முன்னாள் நகர செயலாளர்கள் சேகர் மற்றும் பலர் கலந்து கொண்டனர். பொன் விழா மலரை சிட்டி யூனியன் வங்கி நிர்வாக இயக்குனர் மற்றும் முதன்மை செயல் அலுவலர் காமகோடி வெளியிட அல்அமீன் கல்வி அறக்கட்டளை நிர்வாக அறங்காவலர் மாலிக் பெற்று கொண்டார். இதையடுத்து புதிதாக 5 ஏக்கரில் கட்டப்பட உள்ள மகளிர் கல்லூரிக்கான பணியை, ஓய்வு பெற்ற நீதிபதி அக்பர்அலி துவக்கி வைத்தார். விழாவில் துணைத்தலைவர் சீமாட்டி முகமது ஜியாவுதீன், அன்சாரி, சலீம், உட்பட பலர் கலந்து கொண்டனர். பள்ளி முதல்வர் சையது அப்துல் சுபகான் நன்றி கூறினார்.

;