tamilnadu

img

கராத்தே போட்டி தஞ்சை வீரர்கள் சாதனை

தஞ்சாவூர்: அரியானா மாநிலம் பஞ்ச்குலாவில் தேசிய அளவிலான சாஸ்ட்ராங் கராத்தே நடைபெற்றது. போட்டியில், தமிழ்நாட்டின் சார்பாக தஞ்சை மாவட்டத்தில் இருந்து 8 பேரும், புதுகை, நாமக்கல் மாவட்டங்களின் சார்பில் தலா ஒருவரும் கலந்து கொண்டனர். போட்டியில், பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த 300 க்கும் மேற்பட்ட வீரர்கள்  கலந்து கொண்டனர். இதில், தமிழ்நாட்டின் சார்பாக கலந்து கொண்ட 10 கராத்தே வீரர்கள் 5 தங்கம், 3 வெள்ளி மற்றும் 2 வெண்கலம் ஆகிய 10 பதக்கங்களை வென்று சாதனை படைத்தனர். தேசிய பயிற்சியாளர் திருச்சிற்றம்பலம் ஷேக் அப்துல்லா மற்றும் அவரது தலைமையிலான வீரர்களை, திருச்சிற்றம்பலம் பகுதியில் உள்ள விளையாட்டு வீரர்களும், கிராம மக்களும் வரவேற்று, வாழ்த்துக்கள் தெரிவித்தனர். 

;