tamilnadu

img

காரைக்குடி- திருவாரூர் ரயில் சேவையை துவங்குக! சிபிஎம் ஆர்ப்பாட்டம் 

 தஞ்சாவூர், செப்.5- காரைக்குடி- திருவா ரூர் இடையே, அறந்தாங்கி- பேராவூரணி- பட்டுக் கோட்டை திருத்துறைப் பூண்டி வழியாக முறையாக வும் தினசரி ரயில் இயக்க வலியுறுத்தியும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் பட்டுக்கோட்டை ரயில் நிலை யம் எதிரில் வியாழக்கிழமை மாலை கண்டன ஆர்ப்பாட் டம் நடைபெற்றது.  ஆர்ப்பாட்டத்திற்கு ஒன்றிய செயலாளர் எஸ். கந்தசாமி தலைமை வகித் தார். மாவட்டக் குழு உறுப்பி னர்கள் என்.சிவகுரு, எம். செல்வம் ஆகியோர் முன் னிலை வகித்தனர். மாவட்டச் செயலாளர் கோ.நீலமேகம் கண்டன உரையாற்றினார். ஒன்றியக் குழு உறுப்பி னர்கள் ஏ.கோவிந்தசாமி, எஸ்.சுப்பிரமணியன், கே. கிருஷ்ணமூர்த்தி, முருக.சர வணன், எஸ்.சரோஜா, கிளைச் செயலாளர்கள் எஸ். பாலகிருஷ்ணன், கே.பாண் டியன், எம்.நைனா முகமது, வாலிபர் சங்க ஒன்றியத் தலைவர் மோரிஸ் அண்ணா துரை, ஒன்றியச் செயலாளர் குட்டி என்ற சுந்தரபாண்டி யன், ஆர்.பாலு, எம்.ரமேஷ் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். ஆர்ப்பாட்டத்தில், “காரைக்குடி-திருவாரூர் வழித் தடத்தில் தினசரி நான்கு முறை ரயில் இயக்க வேண்டும். சென்னைக்கு இவ்வழியாக ரயில் சேவை யை தொடங்க வேண்டும். தம்பிக்கோட்டை வடகாடு காலனி தெருவிற்கு செல்லும் பாதையை சரி செய்து கொடுக்க வேண்டும். பட்டுக் கோட்டை அண்ணா குடி யிருப்பு பயணியர் மாளி கைக்கு நேராக உள்ள பாதை யை பொதுமக்கள் போய் வரக்கூடியவாறு வசதி செய்து தர வேண்டும். ரயில்வே ஊழியர்களுக்கு குடியிருப்பு வசதிகள் செய்து தர வேண்டும் உள்ளிட்டவை வலியுறுத்தப்பட்டன.