tamilnadu

தஞ்சை அருகே ஜல்லிக்கட்டு 667 காளைகள் சீறிப்பாய்ந்தன:  23 பேர் காயம்

தஞ்சாவூர், மார்ச் 1- தஞ்சாவூர் அருகே நாஞ்சிக்கோட்டை யில் வீரமுனியாண்டவர் கோவில் விழா வை முன்னிட்டு ஜல்லிக்கட்டுப் போட்டி நடைபெற்றது. புதுக்கோட்டை, காரைக்குடி, திருச்சி, திண்டுக்கல் உள்ளிட்ட மாவட்டங்களிலிருந்து 667 காளைகள் பங்கேற்றன. போட்டியை பொறுப்பு ஆட்சியர் டி.மணிமேகலை துவக்கி வைத்தார்.  வாடிவாசலில் இருந்து சீறிப்பாய்ந்த காளைகளை அடக்க 283 மாடுபிடி வீரர்கள் முயன்றனர். இதில் பிடிபடாத காளைகளின் உரிமையாளர்கள் மற்றும் காளைகளை அடக்கிய வீரர்களுக்கு கட்டில், எவர்சில்வர் அண்டா, மொபைல் போன் உள்ளிட்ட பரிசுப் பொருட்கள் வழங்கப்பட்டன. மேட்டுப்பட்டியை சேர்ந்த மணிகண்டன் என்பவர் சுமார் 25 காளைகளை அடக்கி ப்ரிட்ஜ் பரிசு பெற்றார். மேலும் காளைகள் முட்டிய தில் 23 பேருக்கு காயம் ஏற்பட்டது. முன்ன தாக காளைகள் மற்றும் மாடுபிடி வீரர் களுக்கு மருத்துவ பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.