தஞ்சாவூர், மார்ச் 17- தஞ்சாவூர் மாவட்டம் பேராவூர ணியில் புதிதாக அமைய உள்ள நீதிமன்ற கட்டடப் பணிகளை மாவட்ட நீதிபதி சிவஞானம், கும்பகோணம் தலைமை நீதித்துறை நடுவர் மன்ற நீதிபதி மாதவ ராமானுஜம் ஆகியோர் பார்வையிட்டு ஆய்வு செய்தனர். பின்னர் மாவட்ட நீதிபதி தெரி வித்ததாவது, “நடைபெற்று வரும் கட்டிடப் பணிகளை பொதுப்பணித் துறை விரைவில் முடிக்க வேண்டும். நீதிமன்றம் தொடங்க ஆணை கிடைத்த பிறகு வருகிற ஏப்ரல் மாத இறுதிக்குள் நீதிமன்றம் செயல்படத் தொடங்கும்” என்றார். முன்னதாக நீதிபதிகளை வழக்குரைஞர் சங்கத் தலைவர் ஜெகவீரபாண்டியன், மூத்த வழக்குரைஞர்கள் மோகன், முத்துவேல், பேராவூரணி நகர வர்த்தகர் சங்கத் தலைவர் ஆர்.பி.ராஜேந்திரன், பொறியாளர் கோவி.இளங்கோ ஆகியோர் வரவேற்றனர்.