தஞ்சை அருகே பிள்ளையார்பட்டி திருவள்ளுவர் தெருவில் உள்ள திருவள்ளுவர் சிலை அவமரியாதை செய்யப்பட்டதைக் கண்டித்தும், குற்றவாளிகளை கைது செய்ய வலியுறுத்தியும், இந்திய மாணவர் சங்கம் சார்பில் தஞ்சை கரந்தை தமிழ்ச் சங்க கல்லூரி மாணவர்கள் 2-வது நாளாக போராட்டத்தில் ஈடுபட்டனர். மாணவர் சங்க மாவட்டச் செயலாளர் ஜி.அரவிந்தசாமி, மாநகரச் செயலாளர் அருண்குமார் பங்கேற்றனர்.