tamilnadu

600 ஆண்டு பழமையான சமண கோவிலில் பல லட்சம் மதிப்பிலான 13 சிலைகள் திருட்டு

தஞ்சாவூர்:
தஞ்சாவூர் கரந்தையில் உள்ள சமண கோவிலில் ஐம்பொன் சிலை உள்பட 13 உலோகச் சிலைகளைத் திருடிச் சென்ற மர்மநபர்களை காவல்துறையினர் தேடி வருகின்றனர்.தஞ்சாவூர் கரந்தை ஜைன முதலிதெருவில், 600 ஆண்டுகள் பழமையானஆதீஸ்வரர் என்கிற சமண கோவில் உள் ளது. இக்கோவிலில் ஞாயிற்றுக்கிழமை காலைபின்புறக் கதவு உடைக்கப்பட்டுக் கிடந்தது.தகவலறிந்து அங்கு வந்த காவல்துறையினர் விசாரணை நடத்தினர். 

இதில் கோவிலில் இருந்த 3 அடி உயர ஐம்பொன்னால் செய்யப்பட்ட ஆதீஸ்வரர் சிலை, வெண்கலத்தால் செய்யப்பட்ட தலாஒன்றரை அடி உயர ஜினவாணி, ஜோலமணி,அரை அடி உயர நதீஸ்வரர் சிலை, ஒரு அடிஉயர பஞ்சநதீஸ்வரர் சிலை, தலா முக்கால்அடி உயர நவக்கிரக தீர்த்தங்கரர், நவதேவதா சிலைகள், தாமிரத்தில் செய்யப் பட்ட ஒரு அடி உயர 24-வது தீர்த்தங்கரர் சிலை உள்ளிட்ட 13 சிலைகள் திருட்டு போயிருப்பது தெரியவந்தது. இவற்றின் மதிப்பு பல லட்ச ரூபாய் இருக்கும் எனக் கூறப்படுகிறது.மேலும், இக்கோவிலில் 3 சி.சி.டி.வி.கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப் பட்டுள்ளன. இவற்றில் இரு கேமராக்களில் காட்சிகள் தெளிவாகப் பதிவாகாத அளவுக்குமர்ம நபர்கள் நுரை ஸ்பிரேயர் அடித்துள்ளனர். இதனால், கேமராக்களில் காட்சிகள் தெளிவாக இல்லை. மற்றொரு கேமராவில் பதிவான காட்சிகள் மூலம் காவல்துறையினர் ஆய்வு செய்து வருகின்றனர்.மேலும், காவல்துறையை சேர்ந்த மோப்ப நாய் மோப்பம் பிடிக்காத அளவுக்கு கோவிலிலிருந்து வடவாறு வரை சுமார் 200 மீட்டர் தூரத்துக்கு மிளகாய் பொடியை தூவிச் சென்றனர். இது குறித்த மேற்குகாவல்துறையினர் வழக்கு பதிவு செய்து, மர்ம நபர்களை தேடி வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

;