தஞ்சாவூர், ஜூலை 18- தஞ்சாவூர் மாவட்டம் பேராவூரணி அருகே உள்ள சேது பாவாசத்திரம், மல்லிப்பட்டினம் ஆகிய கடலோர பகுதி களில் கடலோர காவல் படையினரும், காவல்துறையினர் இணைந்து தீவிரவாத தடுப்பு பயிற்சி ஒத்திகை நிகழ்ச்சி நடைபெற்றது. கடந்த சில ஆண்டுக்கு முன்பு மும்பையில் தீவிரவாதி கள் கடல் வழியாக புகுந்து தாக்குதலில் ஈடுபட்டனர். இத னால் கடல் வழி ஊடுருவலைத் தடுக்கும் தீவிரவாத ஒத்தி கைப் பயிற்சி தமிழகம், புதுவை, ஆந்திரம், கேரளம் ஆகிய மாநிலங்களில் 2 ஆயிரம் கிமீ தூரம் கடற்கரையில் ஆப ரேஷன் “சாகர் காவாச்” என்ற பெயரில் மேற்கொள்ளப்பட்டது. இதன்படி தஞ்சை மாவட்ட காவல் துறை, மீன்வளத் துறை, வருவாய்த் துறையினருடன் இணைந்து சேது பாவாசத்திரம், மல்லிப்பட்டினம் கடலோரப் பகுதியில் தீவிர வாதத் தடுப்பு ஒத்திகை நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் சந்தேகப் படகுகள் வந்தால் எப்படி தகவல் தெரிவிப்பது, நடுக்கடலில் மீன்பிடிப் படகுகள் சோதனை மற்றும் தீவிர வாதிகளின் ஊடுருவலின் போது தடுக்கும் வகையி லான நவீன யுக்திகள் குறித்து மீனவர்களுக்கு விளக்கப் பட்டது. மேலும் கிழக்கு கடற்கரைச் சாலையில் வாகனச் சோதனையில் காவல்துறையினர் ஈடுபட்டனர். சேதுபாவா சத்திரம், மல்லிப்பட்டினம் துறைமுகத்தில் கடலோர காவல் படையினர் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.