tamilnadu

img

தஞ்சாவூரில் மத நல்லிணக்க இப்தார் நிகழ்ச்சி

தஞ்சாவூர், மே 20-தஞ்சாவூரில் தமிழ்நாடு சிறுபான்மை மக்கள் நலக்குழு, தஞ்சைமாநகரக் கிளை சார்பில் ஞாயிற்றுக் கிழமை மாலை மத நல்லிணக்க இப்தார்நிகழ்ச்சி நடைபெற்றது. தஞ்சாவூர் கீழவாசல் எஸ்.என்.எம்.நகர் மொய்தீன் அப்துல் காதர் ஜெய்லானி பள்ளிவாசலில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு, தமிழ்நாடு சிறுபான்மை மக்கள் நலக்குழு மாநகரத் தலைவர் ஹெச்.அப்துல் நசீர், மாவட்டத் தலைவர் பி.செந்தில்குமார், பொருளாளர் எஸ்.ஞானமாணிக்கம் ஆகியோர் தலைமைவகித்தனர். பள்ளிவாசல் தலைவர் எஸ்.என்.எம்.இஸ்மாயில் முன்னிலை வகித்தார். செயலாளர் பி.எம்.காதர் உசேன் வரவேற்றார். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாவட்டச் செயலாளர் கோ.நீலமேகம், மாநகரச் செயலாளர் என்.குருசாமி, மாவட்டக்குழு உறுப்பினர் சரவணன், மாநகரக்குழு வடிவேல், அருட் தந்தையர்கள் எம்.சூசைபால், டாக்டர் சி.ரவி,பி.ஜெயபால், வணிகர் சங்கப் பேரவைமாநில துணைப் பொதுச்செயலாளர் பி.சீனிவாசன், நிர்வாகிகள் எஸ்.ஜெயபால், எம்.ஆர்.ரவி, ஜி.பார்த்தசாரதி, கிறிஸ்தவ நல்லெண்ண இயக்கம் டி.டேவிட் சாலமன், ஏ.ஜஸ்டின், பி.கே.பிரான்சிஸ், பள்ளிவாசல் இமாம் அப்துல் ரஹ்மான், லயன்ஸ் சங்க நிர்வாகிகள், வாலிபர், மாணவர், மாற்றுத் திறனாளிகள், மாதர் சங்கம் மற்றும் பல்வேறு கட்சிகள், அமைப்புகளின் நிர்வாகிகள் கலந்து கொண்டனர். நிகழ்ச்சியில் கலந்து கொண்டவர்களுக்கு இப்தார் விருந்து வழங்கப்பட்டது. நிறைவாக பைத்துல்மால் நிர்வாகி எம்.எஸ்.சாகுல் ஹமீது நன்றிகூறினார்.

;