tamilnadu

img

பேராவூரணி ஆசிரியர்களுக்கு பணி நிறைவு பாராட்டு விழா

தஞ்சாவூர், ஏப்.23- தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி சார்பில் பேராவூரணி ஒன்றியத்தில் பணி நிறைவு பெறும்ஆசிரியர்களுக்கு பாராட்டு விழா நடைபெற்றது. வட்டாரத் தலைவர் செல்லத்துரை தலைமை வகித்தார். வட்டாரச் செயலாளர் இராகவன் துரை வரவேற்றார். மாநில பொதுக்குழு உறுப்பினர் நீலகண்டன், செந்தில் நாதன், கிருஷ்ணமூர்த்தி ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாநில துணைத்தலைவர் க.கணேசன் சிறப்புரையாற்றினார். மாவட்டத் தலைவர் அருள், மாவட்டச் செயலாளர் சுப.குழந்தைசாமி, மாநில பொதுக்குழு உறுப்பினர் தேவகுமார் ஜெயபாண்டியன் உள்பட பலர் கலந்துகொண்டு பணிநிறைவு பெறும் ஆசிரியர்களை பாராட்டிபேசினர். பேராவூரணி ஊராட்சி ஒன்றிய கிழக்கு தொடக்கப் பள்ளி தலைமையாசிரியை இரா.மாலதி, துறவிக்காடு கலைமகள் அரசு உதவி பெறும் நடுநிலைப்பள்ளி ஆசிரியை எஸ்.மீனாம்பாள் ஆகியோர் ஏற்புரையாற்றினர். முன்னதாக நாட்டாணிக் கோட்டை ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி தலைமையாசிரியர் கி.லதாஸ்வரி வாழ்த்துப்பா பாடினார். நிறைவில் வட்டார பொருளாளர் சி.லட்சுமணசாமி நன்றி கூறினார். 

;