tamilnadu

கொரோனா வைரஸ் தாக்குதல் அபாயத்தில் இருந்து விவசாயத் தொழிலாளர்களை பாதுகாக்கக் கோரிக்கை

தஞ்சாவூர், மார்ச் 23- கொரோனா அபாயத்தில் இருந்து விவசாய தொழிலாளர்களை பாது காக்க உரிய நடவடிக்கை தேவை என அகில இந்திய விவசாயத் தொழிலாளர் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.  இதுகுறித்து இச்சங்கத்தின் மாநிலச் செயலாளர் கே.பக்கிரிசாமி விடுத்துள்ள அறிக்கையில் கூறி யிருப்பதாவது, “தமிழகத்தில் சுமார் ஒரு கோடி விவசாய தொழிலாளர் கள் வாழ்கின்றனர். அடுக்கப்பட்ட மூட்டைகளில் அடி மூட்டை போல அவர்களின் வாழ்நிலை உள்ளது. வெயில், மழை,புயல்,வெள்ளம், வியாதி எதுவாக இருந்தாலும் முத லில் பாதிக்கப்படுவது இவர்களே. விவசாய தொழிலாளர்கள் வசிப்பி டம் நெருக்கமான குடியிருப்புகளாக உள்ளது. வேலை செய்யும் இடங்களி லும் கூட்டமாக வேலை செய்யும் முறையே உள்ளது. எனவே வியாதி பரவ கூடுதலாக வாய்ப்பு உள்ளது. விவசாய தொழிலாளர் வரட்டு இருமல் என்றால் கடல் நண்டு, அல்லது வயல் நண்டை சமைத்து சாப்பிடுவார்கள். சளி, இருமல், காய்ச்சல், என்றால் கை வைத்தியம் பார்த்து கொள்வார்கள். வியாதி கூடுதல் என்றால் மருந்து கடைக்கு சென்று வியாதியை கூறி ஒருவேளை அல்லது இரு வேளை மாத்திரை வாங்கி பயன்படுத்தும் பழக்கம் உள்ளது.

மருத்துவமனைக்கு மற்ற வியாதிகளுக்காக செல்வார்களே தவிர சளி, இருமலுக்காக செல்லும் பழக்கம் கிடையாது. காலரா, பெரியம்மை போன்ற தொற்று வியாதிகள் வந்த காலங்களில் அதிக உயிரிழப்பு விவசாய தொழிலாளர்க ளிடமே இருந்தது என்பது உண்மை. எனவே அரசு உடனடியாக மருத்துவ குழுக்களை, விவசாய தொழிலாளர்களின் இருப்பிடங்க ளுக்கு அனுப்பி சோதனை மேற்கொ ண்டு அவர்களுக்கு தொடர் சிகிச்சை  அளிக்க வேண்டும். கேரளா, ஆந்திரா மாநிலங்களில் எடுத்த நட வடிக்கை போல் விவசாய தொழி லாளர்களை பாதுகாக்க உடனடியாக இரண்டு மாதங்களுக்கு தேவையான ரேசன் பொருட்களை அவர்களின் வீடுகளுக்கே சென்று வழங்க வேண்டும். குடும்பதிற்கு மாதம் 5000 ரூபாய் ரொக்கமாக வழங்குவதன் மூலம் தான் விவசாய தொழிலா ளர்களின் உயிரிழப்பை தடுக்க முடியும்.. விவசாய தொழிலாளர், பெண் விவசாய தொழிலாளர்கள் அனை வருக்கும் ஒருவர் கூட விடுபடாமல், மைக்ரோ பைனான்ஸ் என்னும் நுண் கடன் வலையில் சிக்கி உள்ளனர். வாரந்தோறும் கடன் கட்ட வேண்டிய சூழ்நிலையில் தினமும் வேலைக்கு செல்ல வேண்டிய கட்டாயம் அவர்க ளிடம் உள்ளது.

5 முதல் 10 கிலோ மீட்டர் தூரம் வரை சென்று வேலை செய்து கடனை செலுத்துகின்றனர்.  எனவே, பெண் விவசாய தொழி லாளர்கள் வேலை தேடி செல்வதை, தடுத்து வீட்டில் இருக்க வேண்டும் என்றால் மைக்ரோ பைனான்ஸ் கடனை அரசு தள்ளுபடி செய்ய வேண்டும். அல்லது உடனடியாக 6 மாதம் கடன் செலுத்துவதை நிறுத்தி வைக்க மாவட்ட ஆட்சியர்கள் மூலம் அறிவிப்பு வெளியிட வேண் டும். மருத்துவ குழுக்களின் மூலம் வீடுவீடாக சென்று நோய் தொற்று உள்ளதா என ஆய்வு செய்து தொடர் சிகிச்சை தேவை. இரண்டு மாத ரேசன் பொருட்க ளை வீட்டிற்கே அனுப்பி வைக்க வேண்டும். மாதம் உதவி தொகை யாக ரூபாய் 5000 வழங்க வேண்டும். மைக்ரோ பைனாஸ் கடனை தள்ளு படி செய்ய வேண்டும் அல்லது உட னடியாக 6 மாதம் நிறுத்தி வைக்க வேண்டும்.தனியார் மருத்துவமனை களில் இலவசமாக சோதனை செய்ய வும், இலவச சிகிச்சை அளிக்கவும் அரசு ஆணையிட வேண்டும். விவசாய தொழிலாளர்கள் வீடுகளில் கிருமிநாசினி மருந்து தெளிக்க ஏற்பாடு செய்ய வேண்டும். கை கழுவ தேவையான சோப்புகள் வழங்க வேண்டும். கொரோனாவை கண்டறிய நடமாடும் சோதனை அமைப்புகளை உருவாக்கி கிரா மங்கள் தோறும் அனுப்பி வைக்க வேண்டும்.தமிழக அரசு விவசாய தொழிலாளர்களை பாதுகாக்க உடனடி மேலாண்மை நடவடிக்கை களை எடுக்க வேண்டும்” என்றார்.