tamilnadu

இலவச கண் பரிசோதனை முகாம்

தஞ்சாவூர், மே 4- இலவச கண் பரிசோதனை முகாம் தஞ்சாவூர் துணைப் போக்குவரத்து ஆணையர் அலுவலகத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. வட்டாரப் போக்குவரத்து அலுவலர் என்.கார்த்திகேயன் முகாமிற்கு தலைமை வகித்தார். மோட்டார் வாகன ஆய்வாளர்கள் நெடுஞ்செழிய பாண்டியன், குண்டுமணி, அரிமா சங்க நிர்வாகிகள் கலந்து கொண்டனர். வாசன் ஐ-கேர் மருத்துவக் குழுவினர் பரிசோதனை செய்தனர். முகாமில் வாகன ஓட்டுநர்கள், பொதுமக்கள் என 117 நபருக்கு பரிசோதனை செய்யப்பட்டது. மேலும் தங்கள் வாகனங்களை பாதுகாப்பாக இயக்குவது குறித்தும் விழிப்புணர்வு துண்டு பிரசுரங்கள் வழங்கப்பட்டன. 


;