tamilnadu

img

ஊரடங்கால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு ரூ.7,500 நிவாரணம் வழங்கக் கோரி ஆர்ப்பாட்டம்

தஞ்சாவூர், ஜூன் 2- ஊரடங்கால் பாதிக்கப் பட்ட குடும்பங்களுக்கு ரூ 7,500 நிவாரணம் வழங்க வேண்டும் உள்ளிட்டவை வலியுறுத்தி தஞ்சாவூர் ரயிலடியில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்துக்கு மாதர் சங்க மாவட்டச் செயலாளர் எஸ்.தமிழ்ச்செல்வி தலைமை வகித்தார்.  பூக்காரத் தெருவில் இ. வசந்தி, தஞ்சை ஒன்றியம் வல்லத்தில் ஜி.பார்வதி, தெற்கு பூக்கொல்லையில் எஸ்.வனரோஜா, அம்மா பேட்டை ஒன்றியம் இராரா முத்திரைக் கோட்டையில் மாவட்டத் தலைவர் ஆர்.கலைச்செல்வி, மார்க்கரேட், ஒன்பத்துவேலியில் ஒன்றி யச் செயலாளர் சசிமதி, மதுக்கூர் ஒன்றியம் மூத்தாக் குறிச்சியில் ஒன்றியச் செய லாளர் கலாவதி, அண்டமி யில் ஹேமா தலைமையில், பாபநாசத்தில் விஜயாள், பட்டுக்கோட்டை ஒன்றியம் கரம்பயத்தில் சாந்தி, பட்டுக்கோட்டையில் கே.மலர்கொடி, பூதலூர் வடக்கில் பி.கலைச்செல்வி ஆகியோர் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. பூதலூர், செங்கிப்பட்டி, புதுக்குடி, துருசுப்பட்டி, அயோத்திப்பட்டி ஆகிய இடங்களில் வசந்தா, அஞ்சலி தேவி, மலர்கொடி, காந்தி, குமாரி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். இதே போல் மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. 

;