தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் ஒன்றியம் கொத்தங்குடி ஊராட்சியில் கொரோனா பாதிக்கப்பட்ட பகுதி மக்களுக்கு சிஐடியு, டிஆர்இயு தஞ்சாவூர் கிளை உதவியுடன் மாக்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கிளை சார்பில் 200 குடும்பங்களுக்கு ரூ.50,000 மதிப்புள்ள உணவு பொருட்களை கட்சியின் மாவட்ட செயற்குழு உறுப்பினர் ஆர்.மனோகரன், சிஐடியு தஞ்சை மாவட்ட செயலாளர் சி.ஜெயபால், விதொச மாநிலக் குழு உறுப்பினர் சி.நாகராஜன், கும்பகோணம் நகர செயலாளர் கே.செந்தில்குமார் உள்ளிட்ட பலர் வழங்கினர்.