கும்பகோணம், ஜூன் 8- கொரோனா வைரஸை கட்டுப் படுத்தும் வகையில் கடந்த மார்ச் 24ஆம் தேதி முதல் ஊரடங்கு பிறப் பிக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து தமிழகம் முழுவதும் ஓட்டல்கள் இயங்க தடை விதிக்கப்பட்டது. ஜூன் 7 வரை சுமார் 75 தினங்கள் 80 சதவீத ஓட்டல்கள் இயங்கவில்லை. இயங்கிய சில ஓட்டல் களில் பார்சல் மட்டுமே வழங்கப் பட்டது. உட்கார்ந்து சாப்பிட அனு மதிக்கப்படவில்லை. இந்த நிலையில் ஜூன் 8 முதல் ஓட்டல்களில் அமர்ந்து உணவு சாப்பிட லாம் என்று தமிழக அரசு அறிவித்துள் ளது. இதைத் தொடர்ந்து ஓட்டல்களை முழுமையாக திறக்கும் பணியில் ஓட்டல் உரிமையாளர்கள் மும்முரமாக ஈடுபட்டனர். ஓட்டல்களை திறந்து சுத்தம் செய்வது, அரசு அறிவித்துள்ள அறிவுரைகளின்படி ஓட்டல்களை எவ்வாறு மாற்றுவது போன்ற பணி யில் ஈடுபட்டனர். மேலும் தனிநபர் இடைவெளியை கடைப்பிடிக்கும் வகையில் டேபிள்கள் மாற்றி அமைக்கப்பட்டன.
கிருமி நாசினி மூலம் ஓட்டல்கள் தூய்மைப் படுத்தப்பட்டன. இந்த நிலையில் கும்பகோணம் பொதுமக்கள் இயற்கை உணவகத்தை நோக்கி படையெடுத்த னர். அப்போது அருகம்புல் சாறு, திரி கடுகம் தேநீர், குதிரைவாலி பொங்கல், கேழ்வரகு கூழ், வாழைத்தண்டு சாறு ஆகியவற்றுக்கு முக்கியத்துவம் கொடுத்து இயற்கை உணவகங்களில் தனிநபர் இடைவெளியுடன் காலை சிற்றுண்டி சாப்பிட்டனர். கும்பகோணத்தில் இயற்கை உண வகத்தில் ‘உணவே மருந்து’ என்ற இலக்குடன் இயற்கை விவசாய முறை யில் விளைவிக்கப்பட்ட தானியங்கள் காய்கறிகள் பழங்களைக் கொண்டு இயற்கை உணவு வகைகள், மூலிகை பானங்கள், மூலிகைச்சாறு அனைத்தும் விற்பனை செய்யப்படு கிறது.
நாட்டு சர்க்கரை மட்டுமே பயன்படுத்தப்படுகிறது. மைதா இல்லாத உணவகம், குளிர் சாதனப் பெட்டி இல்லாத உணவகம், செயற்கை சுவையூட்டி இல்லாத உண வகம், நோய் எதிர்ப்பு சக்தியை அதிக ரிக்கக் கூடிய அனைத்து விதமான உணவுகளும் தயார் செய்யப்பட்டு அளித்து வருகின்றனர். இதனால் கும்பகோணம் பொதுமக்கள் பாரம்பரி யமான முறையில் இயற்கை உணவுக ளுக்கு மதிப்பு அளித்து வாங்கி வரு கின்றனர்.