தஞ்சாவூர், பிப்.8- தஞ்சாவூர் மாவட்டம் பேராவூரணி டாக்டர் ஜே.ஸி.குமரப்பா சிபிஎஸ்இ வித்யாலயா பள்ளியில் மலர்கள் கண்காட்சி விழா நடந்தது. குமரப்பா கல்வி அறக்கட்டளை பொருளாளர் அஸ்வின்ஸ்ரீதர் தலைமை வகித்தார். தமிழ்நாடு மெட்ரிக் பள்ளிகள் சங்க மாநிலத் துணைப் பொ துச் செயலாளர் முனைவர் ஸ்ரீதர் மலர்கள் கண்காட்சியை தொடங்கி வைத்தார். இதில் மாணவர்கள் பல வகையான அபூர்வ மலர்கள் கொண்டு வந்திருந்தனர். 15 வகை மலர்க ளைக் கொண்டு, இந்த கண்காட்சியை அலங்கரித்திருந்தனர். மாணவர்கள் மலர்களை போல் வேடமிட்டு வந்து பார்வை யாளர்களை கவர்ந்தனர்.