தஞ்சாவூர், செப்.3- தஞ்சாவூர் மாவட்டம், பேராவூரணி அருகே பள்ளத்தூர் தொடக்க வேளாண் கூட்டுறவு வங்கியில், விவசாயக் குழுக்களுக்கு பயிர்க்கடன் வழங்கும் விழா செவ்வாய்க் கிழமை நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு சட்ட மன்ற உறுப்பினர் மா.கோவிந்தராசு தலைமை வகித்தார். தஞ்சாவூர் மத்தியக் கூட்டுறவு வங்கி தலைவர் துரை.திருஞானம் விவசாயக் குழுக்களுக்கு பயிர்க்கடன் வழங்கிப் பேசினார். நிகழ்ச்சியில், முன்னாள் மாநில கயிறு வாரியத் தலைவர் எஸ்.நீல கண்டன், தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கி தலைவர்கள் நாடி யம் சிவ.மதிவாணன், ரெண்டாம்புளிக்காடு கணேசன், ஆண்டிக்காடு நாகூரான், சொக்கநாதபுரம் அன்புச் செல்வம், கே.எஸ்.வினோத், கூட்டு றவு வங்கி கள மேலாளர் சிவசாமி, மேற்பார்வையாளர் குமரன் கலந்து கொண்டனர். நிறைவாக பள்ளத்தூர் தொடக்க வேளாண் கூட்டுறவு வங்கி தலைவர் வே.கூத்தலிங்கம் நன்றி கூறினார். 30 விவசாயி கள் குழுக்களுக்கு, தலா 50 ஆயிரம் ரூபாய் வீதம் மொத்தம் ரூ.15 லட்சம் கடனுதவி வழங்கப்பட்டது.