நாகப்பட்டினம், மார்ச் 19- மகளிர் தினத்தை முன்னிட்டு இந்தியன் வங்கியின் நாகை கிளை சார்பில் கடன் வழங்கும் விழா நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு திருவாரூர் மண்டல மேலாளர் ராஜாமணி தலைமை வகித்தார். சினேகா தொண்டு நிறுவன இயக்குனர் ஏசுரத் தினம், தலைஞாயிறு மீன்வளக்கல்லூரி முதல்வர் பாலசுந்தரி ஆகியோர் பேசினர். விழாவில் வணிக பெண் தொடர்பாளர் கள், மகளிர் சுயஉதவிக்குழுக்கள், தொழில் முனைவோர்கள், விவசாயிகள், கால்நடை வளர்ப்போர் ஆகிய தொழில் செய்யும் பெண்க ளுக்கு ரூ.2 கோடியே 40 லட்சம் கடன் உதவி வழங்கப்பட்டது. மேலும் சிறப்பாக செயல் பட்ட மகளிர் சுயஉதவிக்குழுக்களுக்கு இந்தி யன் வங்கி சார்பில் பரிசுகள் வழங்கப்பட்டன. விழாவில் நாகூர், கள்ளிமேடு, வாய்மேடு, வேதாரண்யம், கீழ்வேளூர், திட்டச்சேரி உள்ளிட்ட இந்தியன் வங்கி கிளை மேலா ளர்கள் கலந்து கொண்டனர். முன்னதாக இந்தியன் வங்கி வேளாங்கண்ணி கிளை மேலாளர் சூரியா வரவேற்க, இந்தியன் வங்கி நாகை கிளை மேலாளர் திலிப் நன்றி கூறினார்.