tamilnadu

வேளாண் பொருட்களை மூலப்பொருளாகக் கொண்டு புதிய தொழிற்சாலை தொடங்க விவசாயிகள் கோரிக்கை

தஞ்சாவூர், ஆக.31- தஞ்சாவூரில் புதிய திட்டப் பணிகள்  அடிக்கல் நாட்டு விழா, நிறைவுற்ற பணி கள் திறப்பு விழா, அரசு நலத்திட்ட உத விகள் வழங்கும் விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இதில் கலந்து கொ ண்ட, தமிழக முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமியிடம், தமிழ்நாடு விவசா யிகள் சங்கம் சார்பில் மாவட்டத் தலை வர் பி.செந்தில்குமார் அளித்த கோ ரிக்கை மனுவில் கூறியிருப்பதாவது:  கொரோனா ஊரடங்கு காலத்தில், சுகாதாரத் துறைக்கு இணையாக வேளாண் துறைக்கு விலக்கு அளித்த தமிழக முதலமைச்சருக்கு நன்றியினை தெரிவித்துக் கொள்கிறோம். தமிழ்நா ட்டில் 36 சதவீதம் டெல்டாவில் நெல் பயி ரிடும் நிலையில், கடந்த 2011-ஆம் ஆண்டிற்கு பிறகு அதிக அளவில் உரிய காலத்தில், காவிரி நீர் திறப்பால் குறுவை சாகுபடி செய்யப்பட்டுள்ளது. அறுவடைக் காலம் மழைக்காலம் என்பதால் 20 சதவீதம் ஈரப்பதம் வரை,  மத்திய அரசின் அனுமதியைப் பெற்று  தற்போது போல் நெல் கொள்முதல் செய்திட வேண்டும். மாநில அரசு நெல்லு க்கு வழங்கும் ஊக்கத் தொகையை உயர்த்தி வழங்க வேண்டும்.  128 கோடியே 16 லட்சம் ரூபாய் செல வில், நூற்றுக்கணக்கான கால்வாய்கள்,  பல ஆயிரம் கிலோ மீட்டர் தூர்வாரும் பணிகள், கடந்த ஆண்டுகளை விட  சிறப்பாக நடைபெற்றுள்ளதை வரவே ற்கிறோம்.

அதே நேரத்தில் பல நூற்றாண்டு கால பழமையான பாசன  முறையை கொண்ட காவிரி டெல்டாவில் பாசன வாய்க்கால்கள் உள்ளது போன்று, வடிகால் வாய்க்கால்களும் உள்ளன. அவற்றை கணக்கிட்டு, நிதி ஒதுக்கீடு செய்து, ஏககாலத்தில் மறுசீர மைப்பு செய்திட வேண்டும். கல்லணை கால்வாய் மறுசீரமைப்புக்கு முன்னு ரிமை அளித்திட வேண்டும்.  நரம்பு மண்டலம் போல் கால்வா ய்கள் உள்ள காவிரி டெல்டாவில், ஆழ்கு ழாய் கிணறு அமைக்க, கால்வாயில் இருந்து 100 மீட்டருக்கு மேல் இடை வெளி இருக்க வேண்டும் என்பதனை கைவிட வேண்டும். தூர்வாரிய கால்வா ய்கள் மீண்டும் தூர்வார இரண்டு ஆண்டு களாக மாற்றிட வேண்டும். கூட்டுறவு வங்கிகளை ரிசர்வ் வங்கியுடன் இணை ப்பதை எதிர்க்கும் தமிழக அரசின் முடிவை  வரவேற்கிறோம்.

அதே நேரத்தில் விவ சாயிகள் கடன் பெற மத்திய கூட்டுறவு வங்கிக்கு செல்ல வேண்டிய நிலையை மாற்றி, தொடக்க வேளாண்மை கூட்டு றவு வங்கியிலேயே கடன் பெற உதவிட வேண்டும். விவசாயிகள் பெற்றுள்ள கூட்டுறவு கடன்களை தள்ளுபடி செய்திட வேண்டும்.  திருமண்டங்குடி திருஆரூரான் சர்க்கரை ஆலை நிர்வாகம், விவசா யிகள் பெயரில் அவர்களுடைய நிலத்தை, அவர்களுக்கு தெரியாமலேயே அடமா னம் வைத்து, மோசடியாக கடன் பெற்று, தற்போது ஆலையையும் மூடிவிட்டது. இதனால் விவசாயிகள் கடன் வலை யில் சிக்கித் தவிக்கின்றனர். அவர்களை  கடனில் இருந்து மீட்க உதவிட வேண்டு கிறோம். கரும்பு விவசாயிகளுக்கு மாநில அரசு வழங்க வேண்டிய எஸ்.ஏ.பி (SAP) பாக்கித் தொகையை வழங்கிட வேண்டுமாய் கேட்டுக்கொள்கிறோம்.  தமிழ்நாடு மின்சார வாரியத்தால் அமைக்கப்படும் கும்பகோணம் 230  கே.வி.எஸ்.எஸ் - பாபநாசம் 110 கே.வி. எஸ்.எஸ் அமைக்கும் பணியில், விவசா யிகளின் கருத்து மற்றும் இசைவு கேட்கா மலும், உரிய இழப்பீடு வழங்காமலும் இப்பணி மேற்கொள்ளப்படுகிறது.

சட்ட ப்பூர்வ நிவாரணம் விவசாயிகளுக்கு கிடைத்திட ஆவன செய்திட வேண்டு மாய் கேட்டுக்கொள்கிறோம்.  ஒழுங்குமுறை விற்பனைக் கூடங்க ளில் பருத்தி பஞ்சுகளை உலர்த்துவ தற்கு டிரையர் இயந்திரம் பயன்படு த்திட வேண்டும். 10 ஆண்டுக்கு மேலான பழமையான நெல் விதைகளுக்கு விதை க்கான மானியம் வழங்கிட வேண்டும். பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டல விதிமுறைகளை அரசாணையாக வெளி யிட்ட தமிழக அரசு, மத்திய அரசின் சுற்று ச்சூழல் தாக்க மதிப்பீட்டு கொள்கை யால் வேளாண் மண்டலம் பாதிக்காத வகையில் பாதுகாத்திட வேண்டும்.  அத்துடன் டெல்டா மாவட்ட இளைஞர்களின் வேலைவாய்ப்புக்கு, வேளாண் பொருட்களை மூலப்பொ ருளாகக் கொண்டு தொழில்கள் தொட ங்க வேண்டும். விவசாயிகளுக்கு கூடு தல் வருமானம், வேலைவாய்ப்பு ஆகிய வற்றை உறுதி செய்திட வேண்டும்.