தஞ்சாவூர் ஆக.13- அம்மையகரம் ஆதிதிராவிடர் பகு தியில் பழுதடைந்த தொகுப்பு வீடு களை, பழுது பார்க்க வேண்டும். மிக வும் சேதமடைந்த வீடுகளை இடித்து புதிதாக கட்டித் தர வேண்டும். நிலு வையில் உள்ள நூறுநாள் வேலைத் திட்ட சம்பள பாக்கியை உடனடியாக வழங்க வேண்டும் என வலியுறுத்தி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார் பில் திருவையாறு வட்டார வளர்ச்சி அலுவலகத்தை முற்றுகையிட்டு மனுக் கொடுத்து காத்திருப்பு போரா ட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது. போராட்டத்திற்கு திருவையாறு சிபிஎம் ஒன்றியச் செயலாளர் ஏ. ராஜா தலைமை வகித்தார். எம்.பால முருகன், ஜி.முருகானந்தம் முன் னிலை வகித்தனர். மாவட்டச் செயற் குழு உறுப்பினர் பி.செந்தில்குமார், மாவட்டக்குழு உறுப்பினர் எம்.பழனி அய்யா கோரிக்கைகளை விளக்கிப் பேசினர். ஒன்றியக்குழு உறுப்பினர் கள் கே.மதியழகன், ஆர்.பிரதீப் ராஜ் குமார், துரை.ராமலிங்கம் மற்றும் ஏரா ளமான பொதுமக்கள் கலந்து கொண்ட னர்.
இதைதொடர்ந்து வட்டார வளர்ச்சி அலுவலர் விஜய், ஊராட்சி ஒன்றியப் பொறியாளர், ஓவர்சீயர், ஊராட்சி செயலாளர் ஆகியோர், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சித் தலைவர்களுடன் சமாதானப் பேச்சுவார்த்தை நடத்தி னர். இதில், “திருவையாறு ஊராட்சி ஒன்றியம், அம்மையகரம், ஆதிதிரா விடர் பகுதியில், சுமார் 25 ஆண்டு களுக்கு முன்பு கட்டப்பட்ட, அரசு தொகுப்பு வீடுகள், முக மோசமாக இடிந்து விழும் நிலையில் உள்ளது. ஏற்கனவே வீடு இடிந்து விழுந்து இடி பாடுகளில் சிக்கி இருவர் உயிரிழந் துள்ளனர். மேலும் உயிர்பலி ஏற்படும் அபாயம் உள்ளது. இதுகுறித்து அதிகாரிகளிடம் பல முறை மனு கொடுத்தும் நடவடிக்கை இல்லை.
பிடிஓ அலுவலகம் முன் போராட்டம் நடத்திய போது, ஒரு வார காலத்தில் உரிய நடவடிக்கை எடுக்கப் படும் என உறுதி அளித்தும் மேல்நட வடிக்கை இல்லை. அதேபோல் நூறு நாள் வேலைத் திட்ட சம்பள பாக்கி, தொழிலாளர்களுக்கு வழங்கப்படா மல் நிலுவையில் உள்ளது எனவும் பேச்சுவார்த்தையில் போது சுட்டிக் காட்டப்பட்டது. இதையடுத்து, “நிலுவையில் உள்ள சம்பள பாக்கி விரைவில் வழங்கப்படும், கொரோனா காரண மாக தாமதப்பட்ட தொகுப்பு வீடுகள் பழுது பார்க்கும் பணி 15 தினங்களில் இருந்து 1 மாத காலத்திற்குள் முடித்து தரப்படும்” என அதிகாரிகள் உறுதி அளித்தனர். இதையடுத்து காத்திருப்பு போராட்டம் விலக்கிக் கொள்ளப்பட்டது.