tamilnadu

img

வாலிபர் சங்கம் ஆர்ப்பாட்டம்

தஞ்சாவூர், மே 13- அரசு ஊழியர்களின் ஓய்வு பெறும் வயதை உயர்த்தியதை கண்டித்து வாலிபர் சங்கம் சார்பில் தஞ்சாவூர் மாவட்டம் ஒரத்த நாடு ஒன்றியம் ஆம்ப லாப்பட்டில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.  ஆர்ப்பாட்டத்திற்கு, வாலிபர் சங்க ஒன்றியத் துணைச் செயலாளர் ச.பாஸ் கரன் தலைமை வகித்தார். மாவட்டத் தலைவர் ஆம்பல் துரை. ஏசுராஜா கண்டன உரையாற்றினார். கிளைச் செயலாளர் வினோத், எஸ்.சுதாகர், வி.சுதாகர், சிவா உள்ளிட்ட 20-க்கும் மேற்பட்டோர் கோரிக்கை முழக்கங்களை எழுப்பினர்.