தஞ்சாவூர் டிச.5- தஞ்சாவூர் மாவட்டம் பேராவூர ணியை அடுத்த ஆவணம் கிராமத்தில் அரசு மேல்நிலைப்பள்ளி இயங்கி வரு கிறது. இப்பள்ளியில் 800 க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் பயின்று வருகின்ற னர். இங்கு கடந்த 4 மாத காலமாக தற்காப்புக் கலை பயிற்சி மாணவர்களு க்கு இலவசமாக வழங்கப்படுகிறது. இதுகுறித்து பள்ளித் தலைமை ஆசிரியர் மு.கருணாநிதி கூறுகையில், “கிராமப்புற பகுதியான இங்கு சாதாரண குடும்பத்தைச் சேர்ந்த மாணவ, மாண விகள் பயின்று வருகின்றனர். அவர்க ளிடையே தன்னம்பிக்கையை ஏற்படுத்த வும், உடல் ஆரோக்கியத்துடன் திகழ வும், பெற்றோர் ஆசிரியர் கழகத்தின் ஒத்துழைப்போடு சிலம்பாட்டம், கராத்தே பயிற்சி வழங்கப்படுகிறது” என்றார். கடந்த 4 மாத காலமாக நடைபெற்று வரும் கராத்தே மற்றும் சிலம்பப் பயிற்சி யில் 50 மாணவிகளும், 30 மாணவர்களும் பயிற்சி பெற்று வருகின்றனர். வாரத்தில் திங்கள், செவ்வாய் என இரண்டு தினங்க ளுக்கு மாலை 2 மணி நேரம் கராத்தே பயிற்சியும், பிரதி வாரம் வெள்ளிக் கிழமை ஒரு நாள் மட்டும் மாலை நேரத் தில் சிலம்பப் பயிற்சியும் அளிக்கப்படு கிறது. புதுக்கோட்டை மாவட்டம் வட காடு அருகே உள்ள மாங்காடு பகுதியைச் சேர்ந்த ராஜா என்பவர் மாணவர்களுக்கு தற்காப்புக்கலை பயிற்சி அளித்து வருகிறார்.