tamilnadu

ஊரடங்கால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்கல்

கும்பகோணம், மே 20- தஞ்சை மாவட்டம் கும்ப கோணம் அருகே நாச்சி யார்கோவில் திருநறையூர் பகுதி தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழகம்  சார்பில் கல்வி, ஆம்புலன்ஸ், மருத்துவ சேவை, ரத்ததான முகாம், ஏழை- எளியவர்க ளுக்கு உதவி என மக்கள் தேவை அறிந்து சேவை செய்து வருகின்றனர். இந்நிலையில் ஊர டங்கால் தவித்த மக்களுக்கு உணவளித்தனர்.  இது குறித்து தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம் நாச்சி யார் கோவில் திருநறையூர் கிளை தலைவர் நூருல் அமீன் தெரிவித்ததாவது, ஊரடங்கால் பாதிக்கப்பட்ட மக்களுக்காக தமுமுக தஞ்சை வடக்கு மாவட்டம் திருநறையூர் நாச்சியார் கோவில் கிளை சார்பாக பல்வேறு உதவிகளை செய்து வந்தோம்.

உணவு, மளிகை பொருட்கள் விநி யோகம், விழிப்புணர்வு பிரச் சாரம் என 8 கட்டங்களாக உதவிகளை செய்து வந்தோம். மார்ச் 25 முதல் மே 17 வரை தொடர்ந்து 54 நாட்கள் சாதி, மதம் பாராமல் ஏழை எளியவர்கள், உள்ளாட்சி துறை, காவல்துறை, தூய் மைப் பணியாளர்கள், மருத் துவத்துறை என கொரோனா தடுப்பு பணியில் ஈடுபட்ட பணியாளர்களுக்கும், புலம் பெயர்ந்த வெளி மாநி லத்தினர் என தினந்தோறும் சுமார் 150 முதல் 200 நபர்க ளுக்கு மதிய உணவுகள் தட்டுப்பாடின்றி வழங்கி வந்தோம். இதுவரை கிளை சார்பாக  ரூ 2,50,000 கொரோனா நிவாரண பணிக்காக செலவிடப்பட் டுள்ளது.  இந்த பணிக்கு பொரு ளாதாரம் வழங்கிய சகோ தரர்களுக்கும், கிளை நிர்வா கிகளுக்கு, மக்களுக்கும் நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம் என்றார். 

;