கும்பகோணம்: மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தஞ்சை மாவட்டம் கும்பகோணம் பகுதியில் உழைப்பாளி வர்க்கத்தின் ஒப்பற்ற தலைவர் தோழர் வே.நடராஜன் நினைவு தின சிறப்பு பேரவை கூட்டம் கும்பகோணம் சிஐடியு அலுவலகத்தில் நடைபெற்றது. கூட்டத்திற்கு மாவட்ட செயற்குழு உறுப்பினர் ஆர். மனோகரன் தலைமை வகித்தார். கட்சியின் மத்தியக் குழு மற்றும் மாநிலக்குழு முடிவுகள் பற்றிய விளக்க உரையை மத்தியக் குழு உறுப்பினர் பி.சம்பத் விளக்கிப் பேசினார். மாவட்டச் செயலாளர் கோ.நீலமேகம், செயற்குழு உறுப்பினர்கள் சின்னை. பாண்டியன், சி. ஜெயபால் அருளரசன் மாவட்ட குழு உறுப்பினர் பக்கிரிசாமி நாகராஜன், ஒன்றிய செயலாளர்கள் திருவிடைமருதூர் வடக்கு சா.ஜீவபாரதி, கும்பகோணம் நகரம் செந்தில்குமார், பாபநாசம் ஒன்றியம் காதர் உசேன், கும்பகோணம் ஒன்றியம் பி.ஜேசுதாஸ், திருப்பனந்தாள் ஒன்றியம் சாமிக்கண்ணு மற்றும் மாதர் சங்க அறிவுராணி, சுமதி உள்ளிட்ட உள்ளிட்டோர் லந்து கொண்டனர்.