தஞ்சாவூர், மே 18- தஞ்சாவூர் மாவட்டத்தில், கொரோனா தொற்றால் 71 பேர் பாதிக்கப்பட்ட நிலையில், ஞாயிற்றுக்கிழமை அன்று பாபநாசம் பகுதியைச் சேர்ந்த இருவர் குணமடைந்து வீடு திரும்பினர். இதுவரை 64 பேர் சிகிச்சை முடிந்து நலமடைந்து, வீடு திரும்பிய நிலையில், 7 நபர் தொடர்ந்து தஞ்சாவூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் தங்கி சிகிச்சை பெற்று வருகின்றனர். மேலும், மாவட்டத்தில் சளி, காய்ச்சல், இருமல் ஆகிய அறிகுறிகளுடன், தஞ்சாவூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனை, அரசு ராஜா மிராசுதார் மருத்துவமனை, சோதனை மையங்களில் தனிமைப்படுத்தப்பட்ட மற்றும் சிகிச்சை பெற்ற 13,305 நபர்களுக்கு சளிப் பரிசோதனை செய்யப்பட்டதில், 12,236 நபர்களுக்கு நோய் அறிகுறி இல்லை. 665 நபர்களுக்கு பரிசோதனை முடிவுகள் வர வேண்டியுள்ளது என மாவட்ட நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.