tamilnadu

img

கொரோனா தடுப்பு விழிப்புணர்வு நடவடிக்கை

 தஞ்சாவூர் : தஞ்சாவூர் மாவட்டம் சேதுபாவாசத்திரம் ஒன்றியம், கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள செந்தலைவயல் ஊராட்சியில், ஊராட்சி தலைவர் ரகுமத்துல்லா, கொரோனாவை தடுக்கும் விதமாக பேருந்து நிலையத்தில் விழிப்புணர்வு பதாகை, வைத்துள்ளார். மேலும், வெளியூருக்கு செல்பவர்கள், ஊருக்கு வருபவர்கள் அனைவரும். கை கழுவதற்காக டெட்டால் கிருமி நாசினி லிக்விட், மற்றும் சோப் வைக்கப்பட்டு, தற்காலிக தண்ணீர் குழாய் வசதிகளும் செய்யப்பட்டுள்ளது. ஊருக்கு வருபவர்கள், வெளியூர் செல்பவர்கள் சோப்பிட்டு கை, கால்களை கழுவி, கிருமி நாசினியால் சுத்தம் செய்ய வேண்டும் என அறிவுறுத்தப் பட்டுள்ளனர்.