tamilnadu

img

பெரியார் மணியம்மை பல்கலையில் கலந்தாய்வு கூட்டம்

தஞ்சாவூர், ஏப்.13-பெரியார் மணியம்மை அறிவியல் மற்றும் தொழில்நுட்ப நிறுவனத்தில் தொழில் நுட்பங்கள் மூலம் தரமான உயர்கல்வி வழங்குதல் மற்றும் வழிமுறை குறித்த 2 நாள் கலந்தாய்வு நடைபெற்றது. உயர் கல்வி தரம் உத்தரவாத அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் ஜெ.சத்யப் பிரியா வரவேற்புரை நிகழ்த்தினார். பல்கலைக்கழக துணைவேந்தர் செ.வேலுசாமி, பதிவாளர் சொ.ஆ.தனராஜ் உரையாற்றினர். முதல் அமர்வில் கல்விப்புல முதன்மையர் பி.கே.சிறீவித்யா, 2 ஆம் அமர்வில் சென்னை தேசிய அறிவியல் தொழில்நுட்ப ஆசிரியர் பயிற்சி நிறுவனத்தின் கணினி மற்றும் அறிவியல் துறைத் தலைவர் வி.சண்முகநீதி மற்றும் 2 ஆம் நாள் அமர்வில் காருண்ய நிகர்நிலைப்பல்கலைக்கழக உயர் கல்வி தரம் உத்தரவாத அமைப்பின்இயக்குநர் டி.டென்சிங், 4 ஆவது அமர்வில் மதுரை தியாகராஜர் தொழிற்நுட்ப கல்லூரி மின்னணு துறை தலைவர் எஸ்.பாஸ்கர் கருத்துரையாற்றினர். 

;