tamilnadu

img

தோழர் என்.வெங்கடாசலம் நினைவு தினம்

தஞ்சாவூர், செப்.21- வர்க்கப் போராளி, தஞ்சை தியாகி, மக்கள் தலைவர் தோழர் என்.வெங்கடாசலம் அவர்களின் 42 ஆம் ஆண்டு நினைவு நாள் கொடியேற்று விழா, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தஞ்சை மாநகரக் குழு பழைய பேருந்து நிலையக் கிளை சார்பில் சனிக்கிழமை அன்று பழைய பேருந்து நிலையம் அருகே நடைபெற்றது.  நிகழ்ச்சிக்கு சிபிஎம் மாநகரச் செயலாளர் என்.குருசாமி தலைமை வகித்தார். மாவட்டச் செயலாளர் கோ.நீலமேகம் கொடி ஏற்றி வைத்தார். மாநிலக் குழு உறுப்பினர் என். சீனிவாசன் புகழஞ்சலி உரை நிகழ்த்தினார். மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் ஆர். மனோகரன், வெ.ஜீவகுமார், பி.செந்தில்குமார், என்.வி.கண்ணன்,  எஸ்.தமிழ்செல்வி, கே. அருளரசன், மாவட்டக்குழு உறுப்பினர்கள் இரா.புண்ணியமூர்த்தி, என்.சிவகுரு, என்.சரவணன், எஸ்.ராஜன், ஜி.அரவிந்தசாமி ஆகியோர் பேசினர். மாநகரக் குழு உறுப்பினர்கள் ஹெச்.அப்துல் நசீர், எம்.வடிவேலன், சி.ராஜன், எம்.கோஸ் கனி, சி.ராமு, எஸ்.சாந்தா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். 

;