தஞ்சாவூர், மே 19- தஞ்சாவூர் மாவட்டம், பேராவூரணி அருகே உள்ள தென்னங்குடி ஊராட்சி ஒன்றிய வடக்கு தொடக்கப் பள்ளியில் அங்கன்வாடி புதிய கட்டட பணி துவக்க விழா நடைபெற்றது. சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியில் ரூ 10 லட்சம் மதிப்பில், அங்கன்வாடி கட்டட பணி சட்டமன்ற உறுப்பினர் மா.கோவிந்தராசு தலைமையில் நடைபெற்றது. ஊராட்சி ஒன்றிய ஆணையர் சடையப்பன், ஒன்றியப் பொறியாளர் ஆர்.ஜி.சுரேஷ் முன்னிலை வகித்தனர். தொடர்ந்து அதிமுக ஊராட்சி தலைவர் சார்பில், தென்னங்குடி ஊராட்சி ஆதிதிராவிடர் காலனியில், கொரோனா நிவாரணமாக அரிசி, மளிகைப் பொருட்கள் உள்ளிட்ட ரூ 50 ஆயிரம் மதிப்புள்ள பொருட்களை, சட்டமன்ற உறுப்பினர் மா.கோவிந்தராசு பொதுமக்கள் 113 பேருக்கு வழங்கினார். தென்னங்குடி ஆர்.ராஜா, ஊராட்சி தலைவர் குணதா சரவணன், ஒன்றியக்குழு உறுப்பினர் ராஜலெட்சுமி ராஜகுமார், கூட்டுறவு சங்கத் தலைவர் ஆர்.பி.ராஜேந்திரன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.