tamilnadu

img

குடியுரிமை சட்ட எதிர்ப்பு விளக்க பொதுக்கூட்டம்

கும்பகோணம், பிப்.17- தஞ்சை மாவட்டம் கும்ப கோணம் அருகே சோழ புரத்தில் குடியுரிமை திருத்த சட்ட எதிர்ப்பு பொதுக்கூட்டம் நடைபெற்றது. இஸ்லாமிய கூட்டமைப்பு நிர்வாகி சல்லி நசீர் தலைமை தாங்கினார்.  மேலப்பள்ளிவாசல் கீழ பள்ளிவாசல் ஜமாத்தார்கள் முன்னிலை வகித்தனர். தமிழக வாழ்வுரிமைக் கட்சி நிறுவனர் வேல்முருகன், விடுதலை சிறுத்தை கட்சி யின் மாநில துணைப் பொ துச்செயலாளர் வன்னியரசு, தமுமுக பொதுச் செயலாளர் ஹாஜா கனி, கும்பகோணம் எம்எல்ஏ அன்பழகன் விடு தலை தமிழ் புலிகள் கட்சி தலைவர் அரசன் நீல புலிகள் இயக்கத் தலைவர் புரட்சி மணி கலாச்சாரப் பேரவை இமாம் சவுக்கத்அலி இஸ்லா மிய அழைப்பாளர் யூசுப் ஆகியோர் பேசினர். இஸ்லாமிய கூட்டமை ப்பு மற்றும் தமிழ் அமைப்பு கள் நிர்வாகிகள் உள்பட ஆயிரத்திற்கும் மேற்பட்ட பொதுமக்கள் கலந்து கொண்டனர். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் நகர செயலா ளர் செல்வமணி நன்றி கூறினார்.