தஞ்சாவூர் டிச.10- வெங்காயத்தை பதுக்கி வைத்து வியாபாரம் செய்கிறார்களா என தஞ்சாவூர் காமராஜர் காய்கறி மொத்த விற்பனை சந்தையில், திங்களன்று தமிழக குடிமை பொருள் வணிக குற்றப் புலனாய்வுத் துறையினர் அதிரடியாக ஆய்வு மேற்கொண்டனர். இதில், அரசு நிர்ணயித்த அளவை விட அதிக அளவில் இருப்பு வைத்துக் கொண்டாலோ, அதிக விலைக்கு விற்பனை செய்தாலோ அத்தியாவசிய பொருட்கள் தடுப்பு சட்டத்தில் நடவடிக்கை எடுக்கப்படுமென அறிவுறுத்தி, வியாபாரிகளிடம் வெங்காயத்தின் இருப்பு, சந்தை நிலவரம் குறித்து கணக்கெடுத்துச் சென்றனர்.