tamilnadu

img

தகுதியான நபர்களுக்கு உதவித் தொகை வழங்கக் கோரி மாற்றுத்திறனாளிகள் ஆர்ப்பாட்டம்

தஞ்சாவூர், அக்.10- தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக் கோட்டை, கோட்டாட்சியர் அலுவலகம் முன்பு, தகுதியான நபர்களுக்கு உத வித்தொகை வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலி யுறுத்தி, வியாழக்கிழமை அன்று தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத் திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கத்தின் சார்பில் கோரிக்கை ஆர்ப்பாட்டம் நடைபெற் றது.  ஆர்ப்பாட்டத்திற்கு, மாவட்டத் தலைவர் ஏ.பஹாத் அகமது தலைமை வகித்தார். ஹெச்.ஜலீல் முஹைதீன் கோரிக்கைகளை விளக்கிப் பேசினார். மாவட்டச் செயலாளர் பி.எம்.இளங்கோவன் நிறைவுரையாற்றினார்.  ஆர்ப்பாட்டத்தில், “தமிழக அரசு அரசாணை எண் 41 ஐ முழுமையாக நடைமுறைப்படுத்தி, தகுதியுள்ள நபர்களுக்கு உதவித் தொகை வழங்க வேண்டும். கோட்டாட்சியர் தலைமை யில் குறிப்பிட்ட தேதியில், மாதந் தோறும் மாற்றுத்திறனாளிகள் குறை தீர்க்கும் கூட்டம் நடத்த வேண்டும். இதில் மருத்துவர்கள் உள்ளிட்ட அனைத்து துறை அதிகாரிகள் பங்கேற்க வேண்டும். மாற்றுத் திற னாளிகளுக்கு அடையாள அட்டை, பாதுகாவலர்களுக்கு இலவச பேருந்து, ரயில் பயண அட்டை மற்றும் இதர உதவிகளை வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் வலி யுறுத்தப்பட்டன.  ஆர்ப்பாட்டத்தில் நிர்வாகிகள் மற்றும் பட்டுக்கோட்டை, மதுக்கூர், பேராவூரணி, சேதுபாவாசத்திரம், மதுக்கூர் ஆகிய ஒன்றியங்களைச் சேர்ந்த ஏராளமான மாற்றுத் திற னாளிகள் கலந்து கொண்டு கோரிக்கை முழக்கங்களை எழுப்பினர். ஒன்றியத் தலைவர் கே.கிருஷ்ணமூர்த்தி நன்றி கூறினார்.