கும்பகோணம், அக்.14- மத்திய அரசின் மக்கள் விரோத போக்கை கண்டித்து இடதுசாரிகள் சார்பில் பிரச்சாரப் பயணம் தமி ழகம் முழுவதும் நடைபெற்று வரு கிறது. அதன் தொடர்ச்சியாக தஞ்சை மாவட்டம் திருவிடைமரு தூர் வடக்கு ஒன்றியம் இடதுசாரி கள் கட்சிகள் சார்பாக பிரச்சாரப் பய ணம் நடைபெற்றது. பிரச்சாரப் பயணத்திற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் திருவிடைமருதூர் வடக்கு ஒன்றியச் செயலாளர் ஜீவபாரதி, இந்திய கம்யூனிஸ்ட் ஒன்றிய செயலாளர் மணி மூர்த்தி மார்க்சிஸ்ட் (லெனி னிஸ்ட்) லெனினிஸ்ட் மாவட்டச் செயலாளர் கண்ணன் ஆகியோர் தலைமையில் வேப்பத்தூர் திரு புவனம் அம்மாசத்திரம் திரு நாகேஸ்வரம் திருநீலக்குடி ஆடு துறை திருவிடை மருதூர் ஆகிய பகுதிகளில் பிரச்சாரம் நடைபெற் றது. பிரச்சாரத்தில் சிபிஎம் மாவட்டச் செயற்குழு உறுப்பினர் சீதையா பால், மாவட்ட குழு உறுப்பினர் ஜி. பக்கிரிசாமி, சிபிஐ சார்பில் ராம லிங்கம் உள்ளிட்ட தலைவர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டு மக்கள் கோரிக்கைகளை முன் வைத்து பிரச்சாரம் செய்தனர்.
குளித்தலை ஆர்ப்பாட்டம்
இதே போல் மத்திய அரசின் மக் கள் விரோத நடவடிக்கைகளை கண் டித்து கரூர் மாவட்டம் குளித்தலை சுங்ககேட்டில் இடதுசாரி கட்சிகள் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்தில் சிபிஎம் ஒன்றிய செயலாளர் பிரபாகர் தலை மை வகித்தார். சிபிஐஎம் மாவட்ட செயற்குழு உறுப்பினர் ராஜு, சிபிஐ எம்எல் லிபரேசன் விடுதலை மாவட்டச் செயலாளர் ராமச்சந்தி ரன், சிபிஐ நகர பொறுப்பாளர் மகா லிங்கம், சிபிஎம் மாவட்டக் குழு உறுப்பினர் முத்து செல்வன், சிவா, சங்கரநாராயணன் உள்பட திரளா னோர் கலந்து கொண்டனர்.
திருத்துறைப்பூண்டி
இப்பிரச்சார பயணத்திற்கு சிபிஎம் ஒன்றியச் செயலாளர் டி.வி. காரல்மாக்ஸ், சிபிஐ ஒன்றிய செய லாளர் அ.பாஸ்கர் தலைமையில் பிரச்சார பயணம் அத்திமடை கடை தெருவில் துவங்கியது. பிரச்சாரப் பயணத்தை முன் னாள் சட்டமன்ற உறுப்பினரும் சிபிஐ மாநிலக் குழு உறுப்பினரு மான கே.உலகநாதன் துவக்கி வைத் தார். அத்திமடையில் துவங்கிய பிரச்சார பயணம் திருப்பத்தூரில் முடிவடைகிறது. சிபிஎம் சார்பில் வி.ரவி, ஆர்.வேதையன் ஆர்.மதி யழகன் ஏ.கே.வேலவன், பி.என்.தங்கராசு, சிபிஐ சார்பில் தமிழ்ச் செல்வி ராஜா இரா.ஞானமோகன், டி.ராஜேந்திரன் செல்வராஜ், மகா லிங்கம் உள்ளிட்ட 50-க்கும் மேற் பட்டோர் பிரச்சாரத்தில் கலந்து கொண்டனர்.
அரியலூர்
அரியலூர் மாவட்டம் தா. பழுர் ஒன்றியத்தில், ஒன்றியச் செய லாளர் ஜெ.ராதாகிருஷ்ணன், சிபிஐ ஒன்றியச் செயலாளர்கள் தலை மையில் தெருமுனை பிரச்சாரம் ஞயிறு அன்று நடைபெற்றது. சிபிஎம் என்.பழனிவேல் எ.தங்கராசு சிபிஐ சக்கரவர்த்தி ஆணைமுத்து ரெங்க நாதன் சிபிஎம் மாவட்டச் செயலா ளர் ஆர்.மணிவேல், சிபிஐ மாவட் டச் செயலாளர் இரா.உலகநாதன் ஆகியோர் கலந்து கொண்டனர். அரியலூரில் சிபிஎம் ஒன்றியச் செயலாளர் துரை.அருணன், சிபிஎம் ஒன்றிய செயலாளர் கந்தன் ஆகியோர் தலைமையில் தெரு முனை பிரச்சாரம் மாதா கோயில் தேரடிப் பகுதி, பேருந்து நிலையம் ஆகிய இடங்களில் நடைபெற்றது. மாவட்டச் செயலாளர் சிபிஎம் மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் பி.துரைசாமி எம்.இளங்கோவன், மாவட்டக் குழு உறுப்பினர் ஆர். சிற்றம்பலம், சிபிஐ மாவட்ட துணைச் செயலாளர் தண்டபாணி ஆகியோர் கண்டன உரையாற்றி னார்கள்.