tamilnadu

img

நாச்சியார் கோவிலில் சிஏஏ எதிர்ப்பு கூட்டம் கேரள, புதுச்சேரி முதல்வர்கள் பங்கேற்பு

கும்பகோசுணம், பிப்.10- குடியுரிமை திருத்தச் சட்டத்தை திரும்பப் பெறக் கோரியும், என்ஆர்சி,  என்ஆர் பி ஆகிய கருப்பு சட்டங்களை நடைமுறைப்படுத்தாமல் இருக்க தமிழக சட்டமன்றத்தில் தீர்மானம் இயற்றக் கோரியும் கும்பகோணம் அருகே உள்ள நாச்சியார்கோவிலில் குடியுரிமை திருத்தச் சட்ட எதிர்ப்பு கூட்டமைப்பு மற்றும் அனைத்து கட்சி இயக்கங்கள் சார்பில் கண்டன பொதுக்கூட்டம் நடைபெற்றது. பொதுக்கூட்டத்திற்கு மனிதநேய மக்கள் கட்சி மாநில செயற்குழு உறுப் பினர் ராஜ் முஹம்மது தலைமை வகித்தார். நாச்சியார் கோவில் திரு நறையூர் அனைத்து ஜமாத் நிர்வாகி கள் முன்னிலை வகித்தனர். சிபிஐ எம்எல் மாவட்ட குழு உறுப்பினர் தவச் செல்வம் வரவேற்புரை ஆற்றினார்.  மக்கள் ஒற்றுமை மேடை மாநில ஒருங்கிணைப்பாளர் பேராசிரியர் அருணன் கண்டன உரை ஆற்றினார். எனக்கு ஆதார் இருக்கு, என்பிஆர் எதற்கு என்ற புதிய போராட்டத்தோடு வருகின்ற பிப்ரவரி 26 ஆம் தேதி சென்னையில் கேரள முதல்வரும், புதுச்சேரி முதல்வரும் பங்கு பெறும் மிகப்பெரிய மாநாடு நடக்க இருக்கி றது. இது ஒரு ஒத்துழையாமை இயக்கமாகும் என அவர் பேசினார். கூட்டத்தில் திமுக மாவட்ட செய லாளர் சு கல்யாணசுந்தரம், திருவிடை மருதூர் சட்டமன்ற உறுப்பினர் கோவி செழியன், தீண்டாமை ஒழிப்பு முன்னணி மாநில செயலாளர் சின்னை. பாண்டியன், கும்பகோணம் இளைஞர் பணிக்குழு இயக்குனர் அருட்தந்தை பாஸ்டின் பிரிட்டோ, மனிதநேய மக்கள் கட்சி மாவட்ட துணை செயலாளர் ஜாபர் அலி, விசிக மாவட்ட செயலாளர் தமிழ ருவி, திக வழக்கறிஞர் பி.ரமேஷ், சிபிஎம் ஒன்றிய செயலாளர் எஸ் பழனிவேல், சிபிஐ எம்எல் கண்ணை யன், மக்கள் அதிகாரிகள் அதிகாரம் ஜெயபாண்டியன், குடியுரிமை திருத்த சட்ட எதிர்ப்பு கூட்டமைப்பு முகமது அமீன், ஆதில். பிரேம் நசீர் மற்றும் அனைத்து கட்சி இயக்கங்கள், ஜமாத் நிர்வாகிகள் உள்ளிட்ட ஏராள மானோர் கலந்து கொண்டனர். மாவட்ட செயற்குழு உறுப்பினர் மாலிக் நன்றி உரை ஆற்றினார்.