tamilnadu

நெல் கொள்முதல் தொகையை விவசாயிகளுக்கு உடனே வழங்க கோரிக்கை

கும்பகோணம், மார்ச் 15- தஞ்சை மாவட்டம் நாச்சியார்கோவில் அரசு கொள்முதல் நிலையம் திறக்க வலி யுறுத்தி பல்வேறு போராட்டங்களுக்கு மத்தி யில் தீக்கதிர் உள்ளிட்ட நாளிதழ்களில் செய்தி வெளியானதை யொட்டி அரசு கொள் முதல் நிலையம் திறக்கப்பட்டது. ஆனால் கொள்முதல் நிலையத்தில் தொடர்ந்து சாக்கு இல்லாத காரணத்தினால் அவ்வப் போது நெல் கொள்முதல் செய்வதற்கு தடை ஏற்பட்டு வந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் நாச்சியார் கோயில் பொன்னியம்மன் கோவில் தெருவில் வசித்து வரும் விவசாயி பிச்சை கண்ணு மகன் சண்முகம் (40), அவரது சொந்த நிலத்தில் பயிரிட்ட நெல்லை நாச்சியார் கோவில் கொள்முதல் நிலையத்திற்கு கொண்டு வந்துள்ளார். ஆனால் மூன்று நாட்கள் கழிந்து பிப்ரவரி 27ஆம் தேதி அவருடைய 24 நெல் மூட்டை கொள்முதல் செய்யப்பட்டு ரூ.21 ஆயிரத்து 336 தொகைக் கான ரசீதும் வழங்கப்பட்டது.  அப்பொழுது நெல் கொள்முதல் நிலைய அலுவலர் இரண்டு தினங்களில் தங்களுக்கு உண்டான தொகை உங்கள் வங்கி கணக்கில் வரவு வைக்கப்படும் எனவும் அரசு அறி வித்த விதிமுறைகளுக்கு உட்பட்டு சிட்டா விவசாயி வங்கி கணக்கு புத்தகத்தில் முதல் பக்கம் ஜெராக்ஸ் ஆதார் அட்டை உள்ளிட்ட ஆவணங்களை கொடுத்துள்ளார். ஆனால் இவை அனைத்தும் பெற்றுக் கொண்ட அலு வலர்கள் தற்போது வரை விவசாயி வங்கி கணக்கில் பணம் ஏறவில்லை.  இது சம்பந்தமாக கும்பகோணம் அரசு கொள்முதல் நிலையம் துணை மேலாளர் சந்தித்து கேட்டதற்கு உங்கள் வங்கி கணக்கு எண் இந்தியன் வங்கி ஆகும் வங்கி ஐஎப்எஸ்சி கோட் ஸ்டேட் பாங்க் தவறுத லாக போட்டதால் ஏறவில்லை எனவும் ஒரு வாரம் ஆகும் எனவும் அலட்சியப்படுத்தும் நோக்கில் அதிகாரிகளின் தவறை மறைக்க அலைகழித்து வருகின்றனர். விவசாயி சண்முகமும் தொடர்ந்து சம் பந்தப்பட்ட அதிகாரி நேரில் கேட்பதற்கு மிக வும் அலட்சியமாக ஏறும்பொழுது ஏறும் எங்களுக்கு வேலை இருக்கிறது சென்று வாருங்கள் என்று மீண்டும் அலட்சியப் படுத்தும் வகையில் பேசினாராம். இத னால் மனம் உடைந்த விவசாயி செய்வதறி யாமல் கடனை அடைக்க முடியாமல் மிக வும் சிரமப்பட்டு வருவதை மனவேதனை யுடன் கூறினார்.  இதனை அறிந்த தமிழ்நாடு விவசாய சங்க மாவட்ட செயலாளர் செந்தில்குமார் சம்பந்தப்பட்ட அதிகாரியை தொடர்பு கொண்டு இது சம்பந்தமாக பேசிய பொழுது விரை வில் வங்கி கணக்கில் பணம் செலுத்தப் படும் என அதிகாரி தெரிவித்துள்ளார். உட னடியாக விவசாயிகளிடம் நெல் கொள் முதல் செய்த தொகையை உடன் செலுத்த வேண்டும். இல்லையேல்  விவசாயிகளை திரட்டி போராட்டம் நடத்தப்படும் என்று தெரி வித்துள்ளார்.