tamilnadu

கடைமடைப் பகுதி  வாய்க்கால்களை சீரமைத்திடுக! திராவிடர் கழகம் வலியுறுத்தல்

தஞ்சாவூர், மார்ச் 4- திராவிடர் கழக பட்டுக்கோட்டை கழக மாவட்ட கலந்துரை யாடல் கூட்டம் மதுக்கூர் - படப்பைக்காடு வி.ஆர்.டி திருமண மண்டபத்தில், திராவிடர் கழகப் பொதுச் செயலாளர் இரா.ஜெயக்குமார் தலைமையில் நடைபெற்றது.  தஞ்சை மண்டலத் தலைவர் மு.அய்யனார், குடந்தை க.குருசாமி, பகுத்தறிவாளர் கழக மாநிலத் தலைவர் மா.அழ கிரிசாமி, மாவட்டத் தலைவர் பெ.வீரையன், மாவட்டச் செயலா ளர் வை.சிதம்பரம் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.  கூட்டத்தில், மறைந்த திருச்சி தியாகராஜன் மறை விற்கு இரங்கல் தெரிவித்தும், மேட்டூர் அணையில் இருந்து  திறந்து விடப்படும் தண்ணீர், கடந்த 2 ஆண்டுகளாக கொள்ளி டம் வழியாக கடலில் கலந்து வீணாகிறது. அணையின் முழு  கொள்ளளவு நிரம்பிய நிலையிலும், வாய்க்கால் பழுதடைந்த  நிலையில் இருப்பதால், பட்டுக்கோட்டை, மதுக்கூர், பேரா வூரணி, சேதுபாவாசத்திரம் கடைமடைப் பகுதிகளுக்கு தண்ணீர் சென்றடையாத நிலை உள்ளது. எனவே, கல்ல ணைக் கால்வாய் வாய்க்கால் பழுதுபார்க்கும் பணிகளை விரைந்து தொடங்கி முடிக்க வேண்டும்.  மார்ச் 7 தஞ்சையில் நடைபெறும் திராவிடர் இன எழுச்சி  மாநாடு, கருஞ்சட்டை பேரணியில் திரளாக பங்கேற்பது, மார்ச் 23 அன்று நீட் தேர்வை ரத்து செய்ய வலியுறுத்தி திராவி டர் கழகம் சார்பில் நடைபெறும் மறியல் போராட்டத்தை வெற்றி  பெறச் செய்வது என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறை வேற்றப்பட்டன.  நிகழ்ச்சியில் பேராவூரணி, பட்டுக்கோட்டை, மதுக்கூர் பகுதிக்கு புதிய பொறுப்பாளர்கள் தேர்வு செய்யப்பட்டனர். பொதுக்குழு உறுப்பினர்கள் அரு.நல்லதம்பி, இரா.நீல கண்டன் மற்றும் ஒன்றிய, நகரப் பொறுப்பாளர்கள் கலந்து கொண்டனர்.