tamilnadu

img

கொரோனா தடுப்பு நடவடிக்கையை துரிதப்படுத்துக ! சிபிஎம் ஆர்ப்பாட்டம்

கும்பகோணம், ஜூன் 27- பெட்ரோல்- டீசல் விலை உயர்வை கண்டித்தும், கொரோனா தடுப்பு நடவடிக்கையை துரிதப் படுத்த கோரியும், சாத்தான்குளம் வியாபாரிகள் இருவர் படுகொலை களைக் கண்டித்தும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் கும்பகோ ணம் காந்தி பார்க் அருகில் நடை பெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு நகர செய லாளர் செந்தில்குமார் தலைமை வகித்தார். மாவட்ட செயற்குழு உறுப்பினர் சின்னை. பாண்டியன், மாவட்ட குழு உறுப்பினர் சி.நாக ராஜன், ஒன்றியக்குழு உறுப்பினர் கள் ஆர் ராஜகோபாலன்,  ஏ.செல்வம் செல்வமணி நாகமுத்து ராமர் அறிவு ராணி சுமதி உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர் திருவிடைமருதூர் வட்டாட்சியர் அலுவலகம் முன்பு நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு என்.பி.நாகேந்தி ரன் தலைமை வகித்தார். திருவிடை மருதூர் வடக்கு ஒன்றிய செயலாளர் சா.ஜீவபாரதி, மாவட்ட குழு உறுப்பி னர் பக்கிரிசாமி, ஒன்றியக்குழு உறுப்பினர்கள் முருகேசன், கோவிந்தராஜ், சொக்கலிங்கம், மேலை நீலமேகம், சேதுராமன் கலந்து கொண்டனர்.  பாபநாசத்தில் பேருந்து நிலை யம் முன்பு நடைபெற்ற ஆர்ப்பாட்டத் தில் பாபநாசம் ஒன்றிய செயலாளர் பி.எம் காதர் உசேன் தலைமை வகித்தார் மாவட்ட செயற்குழு உறுப்பினர் ஆர்.மனோகரன், மாவட்ட குழு உறுப்பினர் பி.விஜ யாள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

;