கும்பகோணம்: தஞ்சை மாவட்டம் கும்பகோணத்தில் அனைத்து இஸ்லாமிய இயக்கங்கள் மற்றும் ஜமாத் கூட்டமைப்பு சார்பில் குடியுரிமை திருத்த சட்டத்தை ரத்து செய்ய வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கடந்த 21 ந் தேதி முதல் கும்பகோணம் பழைய மீன் மார்க்கெட் அருகில் காத்திருப்பு போராட்டம் 4 நாட்ளாக தொடர்ந்தது. போராட்டத்துக்கு ஒருங்கிணைப்பாளர்கள் தமுமுக எஸ்டிபிஐ தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் இந்திய தவ்ஹீத் ஜமாத் நிர்வாகிகள் முன்னிலை வகித்தனர். போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, திமுகஸ காங்கிரஸ்ஸ விடுதலை சிறுத்தை நாம் தமிழர் நீலப்புலிகள் இயக்கம் மற்றும் தமிழ் அமைப்புகள் நிர்வாகிகள் உள்பட பலர் கலந்து கொண்டு பேசினர். அனைத்து ஜமாத் நிர்வாகிகள், ஆண்கள், பெண்கள் உள்பட ஐநூறுக்கும் மேற்பட்டோர் தங்களது குடும்பத்துடன் கலந்து கொண்டனர். போராட்டத்தை தொடர்ந்து இஸ்லாமிய அமைப்பின் நிர்வாகிகள் ரஹமத்துல்லா ராஜ் முஹம்மது குடந்தை ஜாபர் போராட்டத்திற்கு ஆதரவாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் செயற்குழு உறுப்பினர் ஆர்.மனோகரன், சென்னை பாண்டியன் மாவட்ட குழு நாகராஜன் கண்ணன் நகர செயலாளர் செந்தில்குமார் ஓய்வூதியர் சங்க பொறுப்பாளர்கள் அன்புமணி ராஜகோபாலன் பேராசிரியர்கள் மார்க்ஸ் ஜெயராமன் நீலப்புலிகள் இயக்கம் நிறுவனர் இளங்கோவன் ஆகியோர் கலந்து கொண்டனர். இந்த போராட்டம், பொதுமக்களுக்கும், போக்குவரத்துக்கு இடையூறு விளைவித்ததாக கூறி போராட்டத்தில் ஈடுபட்ட 100 பேர் மீது காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.