tamilnadu

img

எய்ட்ஸ் நோய் பாதித்த நிலையில் 10 வயது மகளை பலாத்காரம் செய்தவருக்கு 4 ஆயுள் தண்டனை

 தஞ்சாவூர்: 10 வயது மகளை பாலியல் பலாத்காரம் செய்த காமக் கொடூர தந்தைக்கு 4 ஆண்டு சிறை தண்டனை விதித்து தஞ்சை மகளிர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. தஞ்சாவூர் மாவட்டம் மதுக்கூரை சேர்ந்தவர் குமார் (37), கூலித் தொழிலாளி. இவரது மனைவி இறந்த விட்ட நிலையில், தனது 10 வயது மகளை தனியாக வளர்த்து வந்துள்ளார். அவர் அருகே உள்ள பள்ளி ஒன்றில் படித்துள்ளார். சிறுமியின் செயல்பாடுகளில் மாற்றம் தெரிய, பள்ளி ஆசிரியர்கள் விசாரித்த போது, தந்தை குடித்து விட்டு வந்து கடந்த ஒராண்டாக பாலியல் பலாத்காரம் செய்ததும், வெளியில் சொன்னால் கொலை செய்து விடுவேன் என மிரட்டியதும் தெரிய வந்தது. இது தொடர்பான புகாரில் பட்டுக்கோட்டை அனைத்து மகளிர் காவல்துறையினர், குமாரை கைது செய்தனர்.  இந்நிலையில், சிறுமி காப்பகத்தில் இருந்த போது, திடீரென மயக்கமடைந்துள்ளார். இதையடுத்து மருத்துவ சோதனை செய்த போது, எய்ட்சால் பாதிக்கப்பட்டுள்ளது தெரியவந்தது. தொடர்ந்து, அவரது தந்தையை மருத்துவ சோதனையை செய்த போது, அவருக்கு எய்ட்ஸ் இருப்பதும், அவர் மூலமாக சிறுமிக்கு பரவியதும் உறுதியானது.  இவ்வழக்கு மகிளா நீதிமன்றத்தில் நடைபெற்ற வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி எழிலரசி, குமாருக்கு 4 ஆயுள் தண்டனையும், கொலை மிரட்டலுக்கு 6 மாதம் சிறை தண்டனையும், 4,500 ரூபாய் அபராதமும் விதித்துள்ளார். இந்த ஆயுள் தண்டனை சாகும் வரை சிறையில் இருக்க வேண்டும் என தீர்ப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது. அத்துடன் பாதிக்கப்பட்ட சிறுமிக்கு 5 லட்சம் ரூபாய் நிதியுதவியும், உயர்தர சிகிச்சையும் அளிக்க தமிழக அரசுக்கு பரிந்துரை செய்து தீர்ப்பளித்தார்.

;