பேட்மிண்டன் துறை யில் ஒலிம்பிக் தொடருக்கு அடுத்து மிகப் பெரிய தொடராக உலக பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் தொடர் கருதப்படுவதால் இந்த தொடருக்கு வீரர் - வீராங்கனைகள் தீவிர பயிற்சியுடன் களமிறங்குவது வழக்கம். நடப்பாண்டிற்கான உலக பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் தொடர் சுவிட்சர்லாந்து நாட்டின் முக்கிய நகரான பசலில் நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் இந்தியா சார்பில் மொத்தம் 24 பேர் பங்கேற்றனர். இருபாலர், ஒற்றையர் பிரிவில் இந்திய வீரர் - வீராங்கனைகள் வெற்றிகளைக் குவித்து அடுத்த சுற்றுக்கு முன்னேறியுள்ள நிலையில், ஆடவர் இரட்டையர், மகளிர் இரட்டை யர், கலப்பு இரட்டையர் என மூன்று பிரிவு களிலும் இந்திய அணி வழக்கம் போல சொதப்பி சூரிச் விமான நிலையத்திற்குக் கிளம்பியுள்ளது.
ஆடவர் பிரிவில் அதிகம் எதிர்பார்க்கப்பட்ட ராங்கி ரெட்டி - சிராக் ஷெட்டி ஜோடி வாக்ஓவர் (WALK OVER) விதியின் படி தொடரிலிருந்து வெளியேறி யது. அதேபோலக் கலப்பு இரட்டையர் பிரிவிலும் அஸ்வினி பொன்னப்பா - சிராக் ஷெட்டிஜோடி வாக்ஓவர் விதியின்படி வெளியேற்றப் பட்டுள்ளனர். மகளிர் ஒற்றையர் பிரிவில் இந்தியா சார்பில் மொத்தம் 3 ஜோடி களமிறங்கியது. அதிகம் எதிர்பார்த்த அஸ்வினி - சிக்கி ரெட்டி ஜோடி இரண்டாவது சுற்றில் வெளி யேறியது. இரட்டையர் பிரிவுக்கான இந்திய அணியில் மொத்தம் 18 பேர் களமிறங்கினர். உலக சாம்பியன்ஷிப் தொடங்கி மூன்று நாட்கள்தான் ஆகியுள்ளது. அதற்குள் இரட் டையர் பிரிவில் கலந்துகொண்ட அனைத்து இந்திய வீரர் - வீராங்கனைகளும் வெளியேறி விட்டனர். இதே நிலை நீடித்தால் அடுத்த தலை முறைக்குள் இந்திய அணிக்கான பேட்மிண்டன் இரட்டையர் பிரிவுகள் காணாமல் போகும் நிலை ஏற்படும்.