tamilnadu

img

சேதமடைந்த சாலையை சீரமைத்திடக்கோரி வாலிபர் சங்கம் நாற்று நடும் போராட்டம்

சேலம்,செப். 5- சேதமடைந்த சாலையை சீர மைக்க வலியுறுத்தி இந்திய ஜனநா யக வாலிபர் சங்கத்தின் சேலம் மேற்கு மாநகரக் குழுவினர் சாலை யில் நாற்று நட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். சேலம் மாநகரம், 24 ஆவது டிவி ஷன் மூலப் பிள்ளையார் கோவில், பிள்ளையார் நகர் பகுதியிலுள்ள சாலைகள் படுமோசமான நிலை யில் காணப்படுகிறது

. இச்சூழலில் தற்போது பெய்து வரும் மழையின் காரணமாக இந்த சாலைகளில் மழைநீர் தேங்கி நோய்த் தொற்று பர வும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இது குறித்து இப்பகுதி மக்கள் பலமுறை மாநகராட்சி அதிகாரிகளிடம் வலியு றுத்தியும் நடவடிக்கை எடுக்காத நிலையில், பழுதடைந்த சாலை யில் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் சேலம் மேற்கு மாநகரகு குழுவினர் நாற்று நடும் போராட் டத்தில் ஈடுபட்டனர்.

 இப்போராட்டத்திற்கு வாலிபர் சங்கத்தின்  மாநகரச் செயலாளர் ஜெகநாதன் தலைமை வகித்தார். சேலம் மாவட்டச் செயலாளர் கணே சன், சிபிஎம் மாவட்ட செயற்குழு உறுப்பினர் எம்.குணசேகரன், மேற்கு மாநகரச் செயலாளர் எம்.கன கராஜ், நிர்வாகிகள் இந்துமதி, வரத ராஜ பெருமாள் உள்ளிட்ட பலர் பங் கேற்றனர். இதையடுத்து, மாநக ராட்சி அதிகாரிகள் உடனடியாக சாலையை சீரமைப்பதாக உறுதி யளித்ததை தொடர்ந்து அனைவ ரும் கலைந்து சென்றனர்.