tamilnadu

காட்டுப்பன்றி வேட்டை - மூவர் கைது

சேலம், ஆக. 16- காடையாம்பட்டி வனப் பகுதியில் காட்டுப்பன் றியை வேட்டையாடிய 3 பேரை வனத்துறையினர் கைது செய்தனர். சேலம் மாவட்டம், காடையாம்பட்டி ஒன்றியத் தில் உள்ள வனப்பகுதியில் மான்கள், காட்டுப்பன்றிகள் உள்ளிட்ட வன விலங்குகள் வேட்டையாடப்படுவதாக புகார்கள் எழுந்த வண்ணம் உள்ளது. இதையடுத்து டேனிஷ்பேட்டை வனச்சர கத்தில், தின்னப்பட்டி பிரிவு காஞ்சேரி பீட்டில் உள்ள அக்கம்மாகுட்டை பகுதிக ளில், வனத்துறை அதிகாரி கள் ரோந்து பணியில் ஈடு பட்டனர்.

அப்போது, நாட்டு துப்பாக்கியுடன் வந்த 3 பேரை வனத்துறையினர் கைது செய்து விசாரணை யில் ஈடுபட்டனர். அதில், மூவரும் காட்டுப்பன்றியை வேட்டையாடியது தெரிய வந்தது. இதனைத்தொ டர்ந்து காடையாம்பட்டி மாமரத்தூர் பகுதியைச் சேர்ந்த கோவிந்தராஜ் (57), ஏழுமலை (27), சதீஷ் (23) ஆகிய மூவர் மீதும் வழக்குப் பதிவு செய்து அவர்களிடம் இருந்து நாட்டு துப்பாக் கியை பறிமுதல் செய்தனர். 

;