இளம்பிள்ளை, செப்.20- சேலம் மாவட்டம், இளம் பிள்ளை அருகே உள்ள இடங்கணசாலை பேரூ ராட்சி பகுதிக்குட்பட்ட காடையாம்பட்டி, குண்டு ராமன் வளைவு பகுதியைச் சோ்ந்தவர் கந்தசாமி (52). விசைத்தறி தொழி லாளியான இவர் கடந்த செப்.16 ஆம் தேதியன்று இளம்பிள்ளை செல்வ தாகக் கூறி சென்ற நிலை யில், இதுவரை வீடு திரும்ப வில்லை. இதுகுறித்து அவ ரது மகன் ஜெயராஜ் மகுடஞ் சாவடி காவல் நிலையத்தில் கொடுத்த புகார் அளித்தார். அப்புகாரின் பேரில் வழக் குப்பதிவு செய்த காவல் துறையினர் காணாமல் சென்றவரை தேடி வரு கின்றனர்.