இளம்பிள்ளை, மே 18- இளம்பிள்ளை பகுதியில் இடி யுடன் பலத்த மழை பெய்த நிலை யில், வீடுகளுக்குள் தண்ணீர் புகுந் ததால் அப்பகுதி மக்கள் பெரும் அவதிக்குள்ளாகினர். சேலம் மாவட்டம், இளம் பிள்ளை மற்றும் அதன் சுற்று வட்டாரப் பகுதிகளில் ஞாயிறன்று மாலை இடியுடன் கூடிய பலத்த மழை பெய்தது. இதனால் சாலை களில் தண்ணீர் வெள்ளம்போல் பெருக்கெடுத்தது. குறிப்பாக, இளம்பிள்ளை உழவர் சந்தை, சந்தப் பேட்டை பகுதி சாலையில் மழை நீருடன் சாக்கடை நீரும் கலந்து சென்றது. இதனால் இருசக்கர வாக னத்தில் சொல்வோரும், பாதசாரி களும் மிகவும் சிரமப்பட்டனர். மேலும், தாழ்வான வீடுகளில் மழை நீர் புகுந்ததால் பொதுமக்கள் அவதிக்குள்ளாகினர். ஆகவே, இனிவரும் நாட்கள் மழைக்காலங் கள் என்பதால் கால்வாய் மற்றும் சாக்கடையை சுத்தம் செய்து முறைப்படுத்தி சாலையில் தண்ணீர் தேங்காதவாறு நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.