tamilnadu

img

இளம்பிள்ளை அருகே கள்ள நோட்டு அச்சடித்த மூவர் கைது

இளம்பிள்ளை அருகே கள்ள நோட்டு அச்சடித்த 3 பேர் கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 
சேலம் மாவட்டம், இளம்பிள்ளை சுற்றுவட்டாரப் பகுதியில்  கள்ளநோட்டுகளை புழக்கத்தில் விட முயன்ற மூன்று பேரை மகுடஞ்சாவடி காவல்துறையினா் திங்களன்று அதிரடியாக கைது செய்தனா்.  இதில் தப்பக்குட்டை கிராமத்தைச் சேர்ந்த பொண்னுவேல் (52), மடத்தூா் பகுதியைச் சேர்ந்த சதீஷ்(30),  சங்ககிரி அருகே உள்ள தேவண்ணகவுண்டனூா் பகுதியைச் சேர்ந்த சின்னதம்பி(29)  ஆகிய மூவரை கைது செய்த காவல்துறையினர் அவர்களிடமிருந்து சுமார் 1 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் கள்ளநோட்டுகளை பறிமுதல் செய்தனர். மேலும் கள்ள நோட்டுகளை அச்சடிக்க பயன்படுத்தப்பட்ட பிரிண்டர் உள்ளிட்ட கருவிகளை கைப்பற்றி விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
 

;