சேலம், அக்.3- சேலம் அருகே திருமணிமுத்தாற்றில் கழிவுநீரை கலக்கும் சாயப்பட்டறை உரிமையாளர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி பொது மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். சேலம் மற்றும் சுற்றுவட்டார மாவட்ட மக்களின் தண்ணீர் தேவையை பூர்த்தி செய்து வந்த திருமணி முத்தாறு காலப்போக்கில் கழிவு நீர் ஓடையாக மாறி யுள்ளது. இந்நிலையில், கொண்டலாம்பட்டி, நெய்க் காரப்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் உள்ள சாயப்பட் டறை கழிவுகள் நேரடியாக திருமணிமுத்தாற்றில் கலப்பதால் அதிக அளவில் துர்நாற்றம் வீசுவதோடு அப்பகுதியில் சுகாதார சீர்கேடும் ஏற்படுகிறது.
இத னைத் தவிர்க்க மாசு கட்டுப்பாட்டு வாரியம் அவ்வ போது பல்வேறு நடவடிக்கைகள் எடுத்து வந்தாலும் கூட இதற்கு இதுவரை ஒரு நிரந்தர தீர்வு என்பது எடுத்தபாடில்லை. தற்போது சேலம் மாவட்டத்தில் தொடர்ந்து மழை பெய்து வருவதால் திருமணிமுத்தாற்றில் அதிக அள வில் தண்ணீர் ஓடுகிறது. இதனை தனக்கு சாதகமாக பயன்படுத்திக் கொண்ட சில சாயப்பட்டறை உரிமை யாளர்கள் கழிவுநீரை எவ்வித சுத்திகரிப்பும் இன்றி நேரடியாக திருமணிமுத்தாற்றில் திறந்து விட்டுள்ள னர். இதனால் உத்தமசோழபுரம் பகுதியில் செல் லும் திருமணிமுத்தாறு அதிக அளவில் நுரை பொங்கி வழிகிறது.
இதனால் அப்பகுதியில் சுகாதார சீர்கேடு ஏற்படுவதுடன், நிலத்தடி நீரும் பாதிக்கப்பட்டு ஆற் றின் அருகில் உள்ள விவசாய நிலங்களும் பாதிப்படை வதாக அப்பகுதி விவசாயிகள் குற்றஞ்சாட்டியுள் ளனர். எனவே, திருமணிமுத்தாற்றில் கழிவு நீரை திறந்து விடும் சாயப்பட்டறை உரிமையாளர்கள் மீது கடும் நட வடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி பொது மக்கள் மற்றும் விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ள னர்.