tamilnadu

img

சேலம் ரயில் நிலையத்தில் காவல் துறையினர் சோதனை

சேலம், ஏப்.3- தேர்தலுக்காக ரயில் மூலம் பணம் கொண்டு செல்லப்படுவதாக வந்த தகவலின் பேரில், சேலம் ரயில் நிலையத்தில் கோவை விரைவு ரயிலில் காவல் துறையினர் திடீர் சோதனையிட்டனர். கோவையில் இருந்து சேலம் வழியே செல்லும் கோவை(எக்ஸ்பிரஸ்) விரைவு ரயிலில் தேர்தலுக்காக வாக்காளர்களுக்கு பணம் விநியோகிக்க பயணிகள் போல பணம் கொண்டு செல்லப்படுவதாக சேலம் ஜங்ஷன் ரயில்வேகாவல்துறையினருக்கு தகவல் கிடைத்தது. இதனையடுத்து சேலம் ஜங்ஷன் ரயில்வே காவல் துறையினர் சேலம்ரயில் நிலையம் வந்த கோவை ரயிலில் சோதனை செய்தனர். ஒவ்வொரு பெட்டியாக ஏறி பயணிகள் வைத்துள்ள கைப்பை மற்றும் பெட்டிகளை திறந்து அதில் பணம் மற்றும் பொருட்கள் உள்ளதா? என சோதனை செய்தனர். இச்சோதனையில் பணம், பொருள் எதுவும் கைப்பற்றப்படவில்லை.

;